"ரெடி, ஸ்டார்ட்".. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் ஆரம்பம்
10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்
சென்னை : தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.. அதேபோல, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடனும் முடிவடைந்தது...
தமிழக பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 3 வாரமாக நடத்தப்பட்டு வந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 28ம் தேதி நிறைவு பெற்றது..

இன்று ஆரம்பம்
இதையடுத்து, பிளஸ்-2 விடைத்தாள் திருத்துதல் பணிகள் இன்று முதல் அதாவது ஜுன் 1 முதல் 8-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளன. இதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். அதைத் தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் ஜுன் 23-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

ரிசல்ட் எப்போது?
அதேபோல, தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை சுமார் 9.93 லட்சம் மாணவர்கள் எழுதினர்.. கடந்த 30-ம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.. இதைத் தொடர்ந்து, இம்மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகளும் இன்று தொடங்கி உள்ளன.. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள், திருத்துதல் மையங்களுக்கு மே 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது.

விடைத்தாள்கள்
தொடர்ந்து ஜுன் 1 முதல் 9-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெறவுள்ளன. இதில் 55 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து தேர்வு முடிவுகள் ஜூன் 17-ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனிடையே, அதேபோல, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ம் தேதி தொடங்குகிறது. ஜுன் 9 முதல் 17-ம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெறும். இதில் அரியர் பாடத்தேர்வு விடைத்தாள்கள் ஜுன் 10, 11-ம் தேதிகளில் திருத்தி முடிக்கப்படும்.

வெளியீடு
இந்தப் பணிகளில் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 7-ல் வெளியிடப்படும். 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகின்றன.. மேலும் மாணவர்களின் நலன் பாதிக்காமல் திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வுக்கு 17,180 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.. ஆனால், தேர்வில் 16348 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.. 832 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.. எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில், பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய 2 இடங்களில் 4 மையங்களில் 10, பிளஸ்1, பிளஸ் 2 ஆகிய பாடங்களுக்கான தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்குகின்றன.. ஒரே வாரத்தில் தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடையும் என கூறப்படுகின்றன.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications