இடைத்தேர்தலில் வென்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் ஸ்டாலின் முன்னிலையில் 28ம் தேதி பதவியேற்பு
சென்னை: திமுக எம்எல்ஏக்கள் வரும் 28ம் தேதி தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அறையில் ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்கிறார்கள்.
தமிழகத்தில் நடந்த 22 தொகுதிகள் இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக சார்பில் திருப்போரூரில இதயவர்மன், பூந்தமல்லியில் கிருஷ்ணசாமி, பெரம்பூரில் ஆர்.டி.சேகர், ஒசூரில் எஸ்ஏ சத்யா, திருவாரூரில் பூண்டி கலைவாணன், பெரியகுளத்தில் சரவணக்குமார், ஆண்டிபட்டியில் மகாராஜன், திருப்பரங்குன்றத்தில் சரவணன் ஒட்டப்பிடாரத்தில் சண்முகையா, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, தஞ்சாவூரில் நீலமேகம், ஆம்பூரில் வில்வநாதன், குடியாத்தத்தில் காத்தவராயன் உள்பட 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்கள் 13 பேரும் வரும் 28ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநயகர் தனபால் அறையில் திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏக்களாக பதவியேற்கிறார்கள். இவர்கள் 13 பேருக்கும் சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
திமுகவைச் சேர்ந்த 13 பேர் பதவியேற்கும் அதே நாளிலேயே அதிமுகவின் 9 பேரும் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வெற்றி பெற்ற 22 எம்எல்ஏக்களும் அடுத்து சட்டசபை கூடும் போது மானியக்கோரிக்கை விவாத்தில் பங்கேற்பார்கள்.












Click it and Unblock the Notifications