தீபாவளி கொண்டாட்டம்! சென்னை உட்பட.. தமிழகம் முழுவதும் 13 இடங்களில் தீ விபத்து பதிவு!
சென்னை: நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 13 இடங்களில் தீ விபத்து பதிவாகியிருக்கிறது.
சென்னையில் மட்டும் 3 இடங்களில் தீ விபத்து பதிவாகியிருக்கிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள் போதுமான அளவுக்கு இருக்கிறார்களா? தீ விபத்துக்கான சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சில்க் அல்லது நைலான் ஆடைகளை விட பருத்தி ஆடைகளே சிறந்தது. அதேபோல, காலணிகளை அணிந்து கொண்டு, திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
கோவில்பட்டியில் பல்லாக்கு சாலையில் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலை குடோனில், பட்டாசு பொறி விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் தீப்பெட்டி தயாரிக்க வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. அதேபோல மதுரையில் பழைய பொருட்கள் கடையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த இரண்டு விபத்துக்களும் தீபாவளியில் பதிவான பெரிய விபத்துக்களாக உள்ளன.












Click it and Unblock the Notifications