கூண்டோடு காலியாகும் பாஜக ஐடி விங்.. மேலும் 13 பேர் விலகல்.. அதிமுகவில் இணைவதாகவும் அறிவிப்பு!
பாஜக ஐடி விங்கில் இருந்து மேலும் சில நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை: சென்னை மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக ஐடி விங்கில் இருந்து 13 பேர் மொத்தமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விலகிய அனைவரும், சிடி நிர்மல்குமாரை பின்பற்றி அதிமுகவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவும் அதிமுகவும் இணைந்தே கூட்டணியில் பயணித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகிகள் வரிசையாக விலகி அதிமுகவில் இணைவதே இந்த பூசல்களுக்குக் காரணமாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார்.

பாஜக நிர்வாகிகள் விலகல்
அவருக்குப் பிறகு பல பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து விலகி வருகின்றனர். பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்கிற ஜோதி அதிமுகவில் இணைந்தார். அதேபோல் பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவார்கள் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை ஆதரவாளர் அமர் பிரசாத் ட்விட்டரில், கூட்டணிக் கட்சியான அதிமுக இம்மாதிரியான செயலை செய்திருக்கக் கூடாது.

கொங்கு மண்டலம்
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள், ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா? இனி அந்தச் சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை. நாலாண்டு காலம் 420க்களாக வலம் வந்தவர்கள் கதையெல்லாம் ஊரறிந்த விவகாரம். கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதிய அதிமுகவினருக்கு கொங்கு மண்டல வாக்காளர்கள் தக்க பாடத்தை புகட்டியுள்ளனர்.

அமர் பிரசாத் பதிவு
66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றது மீண்டு எழுவதற்கான அறிகுறி இல்லை. கோட்டையைப் பிடிப்பதற்கான கனவை மறந்துவிடுங்கள். அண்ணாமலை தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் பாஜக தான் தமிழகத்தின் எதிர்காலம் " என்று பதிவிட்டிருந்தார். இது அதிமுக நிர்வாகிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிமுகவினர் சிலரும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்தனர்.

கூண்டோடு விலகல்
இந்த நிலையில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகி உள்ளனர். சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவு தலைவர் அன்பரசு, சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவைச் சேர்ந்த 10 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் 13 பேரும் சிடி நிர்மல்குமாரை பின்பற்றி அதிமுகவில் இணையப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications