79 ஆவது சுதந்திர தினம்! 15 தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம்!
சென்னை: 79 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களை பாராட்டும் விதமாக சிறப்பு தங்கப்பதக்கங்கள் 15 காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பணிப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
* க.த.பூரணி - காவல் துணை கண்காணிப்பாளர் - சைபர் கிரைம் பிரிவு - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - சென்னை
* பி.உலக ராணி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - திருநெல்வேலி
* மா. லதா - காவல் ஆய்வாளர் - கடத்தல் தடுப்பு பிரிவு - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - சென்னை
* மு . செந்தில் குமார் - காவல் ஆய்வாளர் - மகுடஞ்சாவடி காவல் நிலையம் - சேலம் மாவட்டம்
* ஜெ. கல்பனாதத் - துணை காவல் கண்காணிப்பாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - தஞ்சாவூர்
* வே. சந்தான லட்சுமி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - திண்டுக்கல்
* மா. வசந்த குமார் - காவல் ஆய்வாளர் - பெருமாநல்லூர் காவல் நிலையம் - திருப்பூர் மாவட்டம்
* வெ. ஜெகநாதன் - காவல் ஆய்வாளர் - வடக்கு காவல் நிலையம் - திருப்பூர் மாநகரம்
* கோ. திலகாதேவி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - அரியலூர்
* இரா. புவனேஸ்வரி - காவல் ஆய்வாளர் - குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - நாகப்பட்டினம்
இதேபோன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2025-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியை பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டள்ளார்கள்.
* முனைவர் - மஹேஷ்வர் தயாள் - கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்த்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் -சென்னை
* ஜெ. மகேஷ் - காவல்துறை துணை தலைவர் - நுண்ணறிவு (உள்நாட்டு பாதுகாப்பு) - சென்னை
* நை. சிலம்பரசன் - காவல் கண்காணிப்பாளர் - திருநெல்வேலி மாவட்டம்
* கு. பிரவீன் குமார் - கூடுதல் காவல் கண்காணிப்பாளர் - தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை - தலைமையகம் - சென்னை
* தா. மேரி ரஜு - காவல் ஆய்வாளர் - சென்னை பெருநகர காவல்துறை
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
மேற்கண்ட விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications