15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 54 வயது நபர்.. கொத்தாக தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.. சென்னையில்!
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்
சென்னை: 15 வயது சிறுமியை ஒரு வருடமாக நாசம் செய்து வந்துள்ளார் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர்.. இப்போது போலீசார் அவரை தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.
சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ்... இவர்தான் அந்த ரியல் எஸ்டேட் அதிபர்.. வயது 54 ஆகிறது.. இவர் வீட்டில் ஒரு பாட்டி வேலை பார்த்து வந்தார்.

இவரது 15 வயது பேத்தி அடிக்கடி பால்ராஜ் வீட்டுக்கு சென்று பாட்டிக்கு உதவி செய்து வந்திருக்கிறார்.. பாட்டியுடனேயே சிறுமி வசித்து வந்ததால், பால்ராஜ்-க்கு இது சாதமாக போய்விட்டது.. சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார்.
ஒரு வருஷத்துக்கும் மேலாக சிறுமியின் சூழலை பயன்படுத்திக் கொண்டு அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.. விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டலும் விடுத்துள்ளார்.. ஒரு கட்டத்தில் சிறுமி கர்ப்பமடைந்து விட்டார்.
அப்போதுதான் பதறி போன சிறுமி, ஒரு வருஷமாக நடந்த கொடுமைகளை பாட்டியிடம் சொல்லி அழுதுள்ளார்.. உடனடியாக போலீசில் இதை பற்றி புகார் செய்யப்பட்டது.. அந்த புகாரின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு போலீசார் பால்ராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications