2 எம்எல்ஏக்களால் தப்பிக்கும் அதிமுக ஆட்சி.. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா?
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து தமிழக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அடுத்து தமிழக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தகுதி நீக்க வழக்கில்18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கமும் செல்லும் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சபாநாயகரின் தீர்ப்பு சரிதான் என்று நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். ஹைகோர்ட் தீர்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்பார்த்த தீர்ப்பு.. அரசியலில் தெளிவு கிடைத்துள்ளது.. ஹைகோர்ட் தீர்ப்பு பற்றி தமிழிசை கருத்து!
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை '
இந்த தீர்ப்பில் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால், 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த தடையில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் தடையில்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறார். இதுதான் தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளை தீர்மானிக்க போகிறது.
என்ன நிலைமை இப்போது
தற்போது தமிழக சட்டசபையின் பலம் 214ஆக குறைந்து இருக்கிறது. மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 108 பேர் தேவை. அதிமுகவிற்கு 109 பேர் பலம் இருக்கிறது.
என்ன நடக்கும்
இந்த நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர தடையில்லை என்று தீர்ப்பு வந்து இருப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் சில எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால் அவர்கள் வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளது. இதை காரணமாக வைத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
ஸ்லீப்பர் செல்கள்
ஏற்கனவே தினகரன் அதிமுகவில் தனது ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதிமுக அரசுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இதில் ஸ்டாலின் ஏதாவது செயலாற்றுவாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.