சென்னை ஐஐடியில் உயரும் வைரஸ் பாதிப்பு.. தலைதூக்கும் கொரோனா? மீண்டும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்?
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உறுதி செய்யப்படும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கடந்த 2020இல் இந்தியாவில் கொரோனா வைரசின் முதல் அலை ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் 2021 டெல்டா கொரோனா காரணமாக நாட்டில் 2ஆம் அலை ஏற்பட்டது. டெல்டா கொரோனாவால் ஏற்பட்ட 2ஆம் அலை முதல் அலையைக் காட்டிலும் மோசமாகவே இருந்தது.
அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு சற்று குறைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாம் அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக முதல் 2 அலைகளைப் போல இல்லாமல் 3ஆம் அலை லேசான பாதிப்பையே ஏற்படுத்தியது.

கொரோனா கட்டுப்பாடுகள்
அதேபோல விரைவாகவே மூன்றாம் அலை மாநிலத்தில் கட்டுக்குள் வந்தது. இதையடுத்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் மெல்ல நீக்கப்பட்டு வந்தன. மாஸ்க் கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மெல்ல கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கித் திரும்பி வந்தனர். இந்தச் சூழலில் தான் நாட்டில் சில பகுதிகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

முதல்வர் ஆலோசனை
தமிழ்நாட்டிலும் மெல்ல வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் கூட அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்,

சென்னை ஐஐடி
இதற்கிடையே சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 18 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை சென்னை ஐஐடியில் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் இதுவரை சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.

அமைச்சர் ஆய்வு
சமீபத்தில் தான் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் ஆய்வு செய்தனர். அப்போது பேசிய அமைச்சர், சென்னை ஐஐடியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பே ஏற்பட்டுள்ளதாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நேற்று மொத்தம் 52 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மாநிலத்தில் இப்போது மொத்தம் 334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications