சென்னை ஐஐடியில் உயரும் வைரஸ் பாதிப்பு.. தலைதூக்கும் கொரோனா? மீண்டும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்?
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உறுதி செய்யப்படும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கடந்த 2020இல் இந்தியாவில் கொரோனா வைரசின் முதல் அலை ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர் 2021 டெல்டா கொரோனா காரணமாக நாட்டில் 2ஆம் அலை ஏற்பட்டது. டெல்டா கொரோனாவால் ஏற்பட்ட 2ஆம் அலை முதல் அலையைக் காட்டிலும் மோசமாகவே இருந்தது.
அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு சற்று குறைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் மீண்டும் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாம் அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக முதல் 2 அலைகளைப் போல இல்லாமல் 3ஆம் அலை லேசான பாதிப்பையே ஏற்படுத்தியது.

கொரோனா கட்டுப்பாடுகள்
அதேபோல விரைவாகவே மூன்றாம் அலை மாநிலத்தில் கட்டுக்குள் வந்தது. இதையடுத்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் மெல்ல நீக்கப்பட்டு வந்தன. மாஸ்க் கட்டாயம் போன்ற கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மெல்ல கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கித் திரும்பி வந்தனர். இந்தச் சூழலில் தான் நாட்டில் சில பகுதிகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

முதல்வர் ஆலோசனை
தமிழ்நாட்டிலும் மெல்ல வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் கூட அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்,

சென்னை ஐஐடி
இதற்கிடையே சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 18 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை சென்னை ஐஐடியில் 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் இதுவரை சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.

அமைச்சர் ஆய்வு
சமீபத்தில் தான் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் ஆய்வு செய்தனர். அப்போது பேசிய அமைச்சர், சென்னை ஐஐடியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான பாதிப்பே ஏற்பட்டுள்ளதாகக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நேற்று மொத்தம் 52 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மாநிலத்தில் இப்போது மொத்தம் 334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை











Click it and Unblock the Notifications