மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த மகனை கண்டு கதறிய தந்தை.. பூந்தமல்லியில் பதற வைத்த சம்பவம்
சென்னை: பூந்தமல்லி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த மகனை கண்டு தந்தை ஒருவர் கதறிய சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் சாய் சந்தோஷ் (18). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இவர்கள் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலப்பன்சாவடி மேம்பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரியிலிருந்து தப்பிக்க வாகனத்தை சந்திரசேகர் திருப்பினார்.
அப்போது சாய் சந்தோஷ் மேம்பாலத்தின் மேலிருந்து விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தன் மகனை வாரி அணைத்துக் கொண்டு அழுத காட்சி அங்கு பார்ப்போரை பதற வைத்தது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications