27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்.. ஆசியம்மாள், அஸ்ரா கார்க் உள்ளிட்ட முக்கிய தலைகள் மாற்றம்!
சென்னை: தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் சென்னை காவல்துறை தலைமையக ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க், சென்னை மாரகர வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன் மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை ஐஜி சுதாகர் சென்னை போக்குவரத்து காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக லோகநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக புவனீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி ஆக வன்னிய பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபி ஆக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஆக பாலநாகதேவி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி சந்தோஷ் குமார், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மற்றும் இணை இயக்குநராகவும், TANGEDCO லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக பிரஜ் கிஷோர் ரவியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மொடாக், மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபியாக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை சரக டிஐஜியாக ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை சரக டிஐஜியாக இருந்த பொன்னி காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜியாக இருந்த பகலவன் திருச்சி சரக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி சரக டிஜிபியாக இருந்த சரவண சுந்தர் கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ராஜேந்திரன், சிஐடி நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாக இருந்த கபில்குமார் சரத்கர் சென்னை காவல் ஆணையராக தலைமையக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர காவல் வடக்கு இணை ஆணையராக இருந்த ரம்ய பாரதி ஐபிஎஸ் மதுரை சரக டிஐஜி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி சரக டிஐஜி ராஜேந்திரன் ஐபிஎஸ் இன்டெலிஜென்ஸ் சிஐடி டிஐஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications