திமுகவின் ஆபரே“சன்”.. செந்தில்குமார் எம்பி கொடுத்த “க்ளூ”! உதிரும் இலைகள்.. அதிரும் வேர்கள்
சென்னை: அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மூன்று பேர் திமுகவுக்கு தாவுவதாக அக்கட்சியின் தருமபுரி தொகுதி எம்.பி குறியீடாக ட்விட்டரில் தெரிவித்த நிலையில், அவர்கள் மூன்று பேருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் இணைய இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
தருமபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார் ட்விட்டரில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர். தன்னுடைய செயல்பாடுகள், கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள், அரசியல் கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.
அதேபோல், பாஜக, அதிமுக, நாம் தமிழர் போன்ற எதிர்க்கட்சிகள் மீது பகிரங்கமாக ட்விட்டரில் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் தருமபுரி செந்தில்குமார். இவரது ட்விட்டர் பதிவுகள் அரசியலில் விவாதப் பொருளாகவும் மாறி வருகின்றன.

பாஜக எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் கடந்த மே மாதம் திமுக எம்பி திருச்சி சிவா மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக. உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் துக்கிவிடுவோம்." என்று பதிவிட்டார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள்
அந்த சமயத்தில் செந்தில்குமாரின் இப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் செந்தில்குமார். அதில், மூன்று இரட்டை இலைகளின் எமோஜி அடுத்து ஒரு அம்பு குறி எமோஜி அடுத்து ஒரு உதயசூரியம் எமோஜியை பதிவிட்டு இருக்கிறார். அதிமுகவை சேர்ந்த 3 பேர் திமுகவுக்கு வரப்போவதாக குறிக்கும் வகையில் அந்த அந்த பதிவு இருந்தது.

மேற்கு மண்டல எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் திமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதையே செந்தில்குமார் சூசகமாக தெரிவித்து உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மூவரும் திமுகவில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

திமுகவில் ஆறுகுட்டி
கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுகவின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி திமுகவில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியபோது, அவரது அணியில் இருந்த ஆறுகுட்டி, பின்னர் எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு தாவினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஆறுகுட்டி, எடப்பாடி அணியில் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் கட்சி தாவியது குறிப்பிடத்தக்கது.
-
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி!












Click it and Unblock the Notifications