பிறந்து 3 நாட்கள், 10 நாட்களேயான பச்சிளம் குழந்தைகளுக்கும் கொரோனா.. சென்னையின் நிலைமையை பாருங்க
சென்னை: சென்னையில் பிறந்து 3 நாட்களான குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல 10, 50 நாட்களே ஆன குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் இன்று, பிறந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் 527 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 266 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பிறந்து 3 நாட்கள், 10 நாட்கள் ஆன இரண்டு ஆண் குழந்தைகள், 50 நாட்களான ஒரு பெண் குழந்தை என சென்னையில் ஒரே நாளில் 3 பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கடலூரில் இன்று 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு வயதுக்கூட நிரம்பாத ஒரு ஆண் குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவத் துறை வட்டாரங்கள் கூறுகையில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கொரோனா தொற்று ஏற்படுவது என்பது மிகவும் குறைவாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே குழந்தைகளுக்கு அதிகம். ஆனால், தாய்ப்பால் போன்றவற்றின் மூலமாக குழந்தைகளுக்கு பரவியிருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இந்த வைரஸ், காற்று மூலமாக மட்டுமின்றி, உடலின் வியர்வை, உமிழ்நீர், சிறுநீர், மலம் போன்றவற்றின் மூலமாகவும் பிறருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
சென்னையை மீண்டும் அலறவிடும் கொரோனா! மருத்துவர் பகிர்ந்த திடுக் தகவல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications