Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கத்தை விடுங்க! வண்டலூரில் புதுசா ஒன்னு வருதே தெரியுமா! வேலைக்கு செல்ல ரெடியா இருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் நிறைய பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிகிறது.

மாநகரங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அபரிமித வளர்ச்சியால் அந்த பகுதியின் நில மதிப்பு, வீட்டு வாடகை, கடை வாடகை உள்ளிட்டவை அதிகமாகவே உள்ளன.

3 IT parks to be set up in Tamilnadu


முன்பெல்லாம் அந்த குறிப்பிட்ட இடங்களுக்கு குடிபெயரவே தயங்கி வந்த நிலையில் ஐடி நிறுவனங்கள் வந்ததால் அந்த இடத்தில் தற்போது வாடகைக்கு வீடு கிடைப்பதே அரிதாகிவிட்டது என்றே சொல்லலாம்.

எப்போதுமே எந்த பகுதியில் தொழில்கள் அதிகமாக இருக்கிறதோ அந்த இடம் வளர்ச்சி பெறும் என்பது கண்கூடாக பார்த்திருக்கிறோம். தரமணியில் எப்போது டைடல் பார்க் வந்ததோ அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் எல்லாம் வளர்ச்சி அடைந்துள்ளன. அது போல் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த நிலையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இது தவிர சென்னையில் வெளிவட்ட சாலையில் உள்ள மண்ணிவாக்கம், மலையம்பாக்கம், வண்டலூர் ஆகிய பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க அரசு ஆயத்தமாகி வருகிறது.

டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதற்கட்ட அனுமதியை தந்துள்ளது. நிலமும் தேர்வு செய்யப்பட்டு அதை சரி செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மலையம்பாக்கத்தில் 5.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ 3 கோடியாகும்.

அது போல் மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. இதன் மதிப்பு ஒரு ஏக்கருக்கு ரூ 5 கோடியாகும். அடுத்ததாக வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. இதன் மதிப்பு ஏக்கர் ரூ 8 கோடியாகும். இந்த 3 ஐடி பூங்காக்களையும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை பன்முடங்கு உயர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது கூடுதலாக 3 ஐடி பார்க்குகள் அமைகின்றன. ஐடி பூங்கா அமைக்க நியமிக்கப்பட்ட ஆலோசகர் பணியை தாமதப்படுத்தியதால் அவரை அதிகாரிகள் நீக்கிவிட்டனர்.

சேமிப்பு கிடங்குகளை அமைக்க தமிழக தொழில் மேம்பாட்டு கழகம் 36 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மதிப்பு ரூ 70 கோடி முதல் ரூ 75 கோடி வரையாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+