மழை காரணமாக பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்.. 3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை காரணமாக தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சனையாகவே உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் உள்ளிட்ட சேவைகளை ஏற்படுத்தினாலும், இன்னும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.

3-km traffic jam in Chennai Perungalathur as heavy rain hits motorists

சென்னை பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் நோக்கிச் செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் ஒவ்வொரு நாளும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால ஊர்திகள் ஊர்ந்து செல்லும் நிலை தான் இன்று வரை நீடித்து வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்த நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூரில் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+