3 ஸ்வீட் திட்டம்.. அரசு ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்த போகும் மோடி.. வரப்போகும் அதிரடி அறிவிப்புகள்
சென்னை: மத்திய அரசு 3 முக்கியமான அறிவிப்புகளை விரைவில் வெளியிட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருடா வருடம் விலைவாசி உயர்ந்து வருகிறது. விலைவாசிக்கு ஏற்றபடி எப்போதும் சம்பளமும் உயர வேண்டும். தனியாரில் இதற்காக வருடா வருடம் ஹைக் கொடுக்கப்படும். இதுவே அரசு நிறுவனங்களில் செய்தால் அதை அகவிலைப்படி உயர்வு என்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.

இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. கர்நாடக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதத்தை 4% உயர்த்தி உள்ளது அம்மாநில அரசு. கர்நாடகா மாநிலத்தில் DA விகிதம் 31% இல் இருந்து 35% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது.
மே மாதத்தில், உத்தரப் பிரதேச அரசும் தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முறையே 4% DA மற்றும் DR உயர்வை ஏற்படுத்தியது. இதை ஜனவரி 1, 2023 முதல் வழங்க முடிவு செய்தது. இந்த உயர்வைத் தொடர்ந்து, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR விகிதம் 38 லிருந்து முதல் 42% ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரலில், ஹரியானா அரசு 7வது ஊதியக் குழுவின் ஊதிய மேட்ரிக்ஸின் படி சம்பளம் பெறும் மாநில ஊழியர்களுக்கு அகவிலைப்படி விகிதத்தில் 4% உயர்வு அறிவித்தது. ஹரியானா மாநிலத்தில் DA விகிதம் ஜனவரி 1, 2023 முதல் அடிப்படை ஊதியத்தில் 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
3 அறிவிப்புகள்: இந்த நிலையில்தான் மத்திய அரசு 3 முக்கியமான அறிவிப்புகளை விரைவில் வெளியிட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது.
அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.
அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
அறிவிப்பு 2 - அதேபோல் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை வழங்கப்படும். இந்த டிஏ நிலுவை காரணமாக சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பு 3- அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் ஓய்வூதியத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இபிஎப்ஓ ஆலோசனை செய்து வருகிறதாம். மத்திய அரசின் EPFO அமைப்புதான் ஊழியர்களின் பென்சன் கணக்குகளை நிர்வகித்து வருகிறது. ஊழியர்களுக்கு எப்படி பென்சன் கொடுக்க வேண்டும் என்பதற்கான விதிகளை வகுப்பது இவர்கள்தான்.
இப்போது இருக்கும் விதிப்படி ஒருவர் வாங்கும் வருமானத்தில் கடந்த 60 மாதங்கள் பெற்ற சராசரி வருமானத்தை அவர்களின் பென்சன் சர்வீஸ் மூலம் பெருக்கி அதை 70 ஆல் வகுக்கும் முறை உள்ளது.

ஆனால் இதை மாற்ற உள்ளனர். புதிய விதிப்படி வெறும் 60 மாத வருமானத்தின் சராசரியை மட்டும் கணக்கிடாமல் மொத்தமாக அவர்கள் வேலை பார்த்த அனைத்து வருடத்தின் சராசரி சம்பளம் எடுக்கப்படும்.
உதாரணமாக இப்போது இருக்கும் முறைப்படி கடந்த 60 மாதங்களில் உங்கள் வரும் 80 ஆயிரம் மற்றும் பென்சன் 32 வருடங்கள் என்று வைத்துக்கொள்வோம். 80,000 ஐ 32 ஆள பெருக்கி 70 ஆல் வகுக்க வேண்டும். பென்சன் தொகை 36,571 ரூபாய் வரும்.
புதிய முறைப்படி வெறும் 60 மாத வருமானத்தின் சராசரியை மட்டும் கணக்கிடாமல் மொத்தமாக அவர்கள் வேலை பார்த்த அனைத்து வருடத்தின் சராசரி சம்பளம் எடுக்கப்படும். இதனால் தொடக்க காலங்களில் நீங்கள் வாங்கிய 30, 40 ஆயிரம் வருமானத்தையும் வைத்து சராசரி கணக்கீடு செய்வார்கள்.
அப்படி செய்யும் பட்சத்தில் உங்களின் பென்சன் தொகை கணிசமாக குறையும். இந்த புதிய பென்சன் கணக்கீட்டு முறையைத்தான் கொண்டு வர மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இபிஎப்ஓ ஆலோசனை செய்து வருகிறதாம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications