30 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30355 பேருக்கு கொரோனா.. 293 பேர் பலி!
சென்னை: தமிழகத்தில் இன்று 30355 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 25-29 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தினசரி கேஸ்கள் பதிவான நிலையில், இன்று 30 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் ஒரே நாளில் பதிவாகி உள்ளது. இதன் மூலம் இரண்டாம் அலை வீரியம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது தெளிவாகிறது.

தமிழகம் இன்று
தமிழகத்தில் இன்று 30355 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1468864 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 172735 ஆக உயர்ந்துள்ளது.

பலி
தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 293 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 16471 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று 19508 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர்.

சோதனை
தமிழகத்தில் இன்று 156356 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று 149853 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 24003069 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 7564 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 40613 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 2636 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 15178 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் 2670 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 13290 பேர் செங்கல்பட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications