ஆதி திராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு 35 வகை பயிற்சிகள்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் கல்வியின்
தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதாவது ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு 35 வகையான
பயிற்சிகள் அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

விதி எண். 110ன் கீழ் அறிவிப்பு
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண்.
110ன் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் கல்வித்
தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதல்படி
பயிற்சிகள் அளிப்படும் என்ற அறிவித்திருந்தார்கள்.

35 பயிற்சிகள்
இதற்காக முதற்கட்டமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி
ஆசிரியர்களுக்கு 35 விதமான பயிற்சிகள் அளிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு
அரசு பிறப்பித்துள்ளதாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த திட்டடத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு
கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பயிற்சி, ஆங்கில இலக்கணம், செயல்வழி
கற்றல், புதிய பாடத்திட்டம், ஆங்கிலப் பேச்சாற்றல், கணினி, அறிவுத்திறன்
உள்ளிட்ட 35 வகையான பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

1,464 பள்ளிகள் பயன்பெறும்
இந்த திட்டத்தால் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறையின் கீழ்
இயங்கும் 1,138 ஆதி திராவிடர் நல பள்ளிகள், 318 அரசு பழங்குடியினர் உண்டி
உறைவிட பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் உள்ளிட்ட
1,464 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயிற்சி பெற்று தங்களது
கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொள்வர்.

சமூக அளவில் உயர திட்டம்
சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியின
இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றமடைய செய்ய சிறந்த வழி
அவர்களுக்கு உரிய கல்வி அளித்து முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்
இவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி ஆதிதிராவிடர் நலத்துறை
செயலல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இளம் வயதில் இருந்தே மாணக்கர்கள்
ஆங்கில இலக்கணம், பேச்சாற்றல், கணினி போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்
என்ற நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications