ஆதி திராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கு 35 வகை பயிற்சிகள்! அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் கல்வியின்
தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதாவது ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளி ஆசிரியர்களுக்கு 35 வகையான
பயிற்சிகள் அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

விதி எண். 110ன் கீழ் அறிவிப்பு
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண்.
110ன் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் கல்வித்
தரத்தை மேம்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதல்படி
பயிற்சிகள் அளிப்படும் என்ற அறிவித்திருந்தார்கள்.

35 பயிற்சிகள்
இதற்காக முதற்கட்டமாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி
ஆசிரியர்களுக்கு 35 விதமான பயிற்சிகள் அளிப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு
அரசு பிறப்பித்துள்ளதாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த திட்டடத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு
கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பயிற்சி, ஆங்கில இலக்கணம், செயல்வழி
கற்றல், புதிய பாடத்திட்டம், ஆங்கிலப் பேச்சாற்றல், கணினி, அறிவுத்திறன்
உள்ளிட்ட 35 வகையான பயிற்சிகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

1,464 பள்ளிகள் பயன்பெறும்
இந்த திட்டத்தால் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறையின் கீழ்
இயங்கும் 1,138 ஆதி திராவிடர் நல பள்ளிகள், 318 அரசு பழங்குடியினர் உண்டி
உறைவிட பள்ளிகள் மற்றும் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் உள்ளிட்ட
1,464 பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பயிற்சி பெற்று தங்களது
கற்பித்தல் திறனை மேம்படுத்திக் கொள்வர்.

சமூக அளவில் உயர திட்டம்
சமூக அளவிலும் பொருளாதார அளவிலும் பின்தங்கிய ஆதிதிராவிடர், பழங்குடியின
இனத்தை சார்ந்தவர்களை சமூக, பொருளாதார முன்னேற்றமடைய செய்ய சிறந்த வழி
அவர்களுக்கு உரிய கல்வி அளித்து முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான்
இவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கி ஆதிதிராவிடர் நலத்துறை
செயலல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இளம் வயதில் இருந்தே மாணக்கர்கள்
ஆங்கில இலக்கணம், பேச்சாற்றல், கணினி போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்
என்ற நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications