வேகமாக குறையும் கேஸ்கள்.. தமிழ்நாட்டில் இன்று 3715 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 54 பேர் பலி!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3715 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் 4 ஆயிரத்திற்கும் குறைவான கேஸ்கள் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா தளர்வுகள் அமலில் உள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் கூட கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது.

கேஸ்கள்
தமிழ்நாட்டில் இன்று 3715 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 54 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 33059 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 4029 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2432017 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 34926 ஆக உள்ளது.

சோதனை
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2500002 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 155357 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று 154028 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 32787062 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 214 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 1937 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 436 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 2992 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 330 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 4080 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications