செதுக்கி இருக்காங்களே.. அரசு ஊழியர்களுக்கு.. அம்சமான 4 அறிவிப்புகள்.. எல்லாமே இனிமேல் மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு தங்கள் ஊழியர்களுக்கு என்று கடந்த சில நாட்களில் முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்புகள் என்னென்னவென்று இங்கே பார்க்கலாம்.

அறிவிப்பு 1: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) செப்டம்பர் 1, 2013க்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு குழுக் காப்பீட்டுத் திட்டத்தின் ஜிஐஎஸ் விலக்குகளை நிறுத்தியுள்ளது. அதாவது ஜிஐஎஸ் பிடித்தம் இனி செய்யப்படாது. அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து இத்தனை காலம் பிடிக்கப்பட்ட குரூப் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு இனி பணம் பிடிக்கப்படாது.

dearness allowance

மத்திய அரசு ஊழியர் குழுக் காப்பீட்டுத் திட்டம் (CGEGIS) ஜனவரி 1982 இல் நடைமுறைக்கு வந்தது. இது அரசு ஊழியர்களுக்கு இரண்டு நன்மைகளை வழங்குகிறது: அவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கான காப்பீட்டுத் தொகை மற்றும் ஓய்வு பெறும்போது மொத்தத் தொகை செலுத்துதல்.

இப்போது இதற்கான பிடித்தம் நிறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பான EPFO ​​ஆணை இரண்டு விஷயங்களைக் கூறி உள்ளது.

செப்டம்பர் 1, 2013க்குப் பிறகு EPFO ​​இல் சேர்ந்த ஊழியர்களுக்கு GIS இன் கீழ் விலக்குகள் நிறுத்தப்படும். இதுவரை செய்யப்பட்ட கழிவுகள் அவர்களுக்குத் திருப்பித் தரப்படும். 01.09.2013 க்குப் பிறகு EPFO ​​இல் சேர்ந்த அனைத்து ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து எங்கு செய்யப்பட்டாலும் GIS இன் கீழ் உள்ள கழிவுகளை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று EPFO சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

GIS நிறுத்தப்பட்ட பிறகு, அரசு ஊழியர்கள் தங்கள் நிகர சம்பளத்தில் அதிகரிப்பைக் காணலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது அரியரும் கிடைக்கும். அதாவது இதுவரை செய்யப்பட்ட கழிவுகளுக்குப் பதிலாக ஒரு மொத்தத் தொகை வழங்கப்படும். அதோடு ஊழியர்களுக்கு நிகர-இன்-ஹேண்ட் சம்பளம் இப்போது அதிகரிக்கப்படும்.

GIS விலக்குகள் சேமிப்பு மற்றும் காப்பீட்டின் இரட்டை நோக்கங்களுக்கு உதவியது. ஓய்வுபெறும் போது வழங்கப்பட்ட பெரிய மொத்தத் தொகையுடன் ஒப்பிடும்போது மாதாந்திர GIS விலக்குகள் மிகக் குறைவு. எனவே நிகர வருமானம் இனி அதிகரிக்கலாம்.

அறிவிப்பு 2: மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த அகவிலைப்படி உயர்வு 3 சதவிகிதம் இருக்கலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. . சீனியர் ஊழியர்களுக்கு சுமார் 1.90 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இதனால் நேரடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது.அடுத்த அகவிலைப்படி உயர்வு 3% உயரும் பட்சத்தில் டிஏ 53 சதவிகிதம் ஆக மாறும். அப்படி மாறும் பட்சத்தில் இப்போது 15 ஆயிரம் ரூபாய் அகவிலைப்படி பெறுபவர்கள் 16500 ரூபாய் வரை அகவிலைப்படி பெறுவார்கள்.

அறிவிப்பு 3: நாடு முழுக்க உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. ஆன்லைன் வழியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு CGHS அட்டை வழங்குவதற்கான புதிய வழிகாட்டுதல்களை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்திற்கான (சிஜிஹெச்எஸ்) பங்களிப்பு செலுத்தும் முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

CGHS கார்டு என்றால் என்ன?: மத்திய அரசின் சுகாதாரத் (சிஜிஹெச்எஸ்) திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசு மையம் சார்பாக மருத்துவ சேவை வழங்கப்படும். இந்தியா முழுவதிலும் உள்ள 80 நகரங்களில் சுமார் 42 லட்சம் பயனாளிகள் CGHS-ன் கீழ் உள்ளனர்.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, "தற்போது பணியில் உள்ள செய்யும் ஊழியர்கள் தற்காலிக reference எண்ணை உருவாக்க ஆன்லைனில் (www.cghs.nic.in) புதிய CGHS கார்டுக்கு கட்டாயமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பித்த பிறகு, அவர்கள் அதை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து, அதில் முறையாக கையொப்பமிடப்பட்ட மற்றும் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட கடின நகலை, தற்போது பணிபுரியும் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு CGHS அட்டைகள் வழங்கப்படும்.

ஓய்வு பெற்றவர்கள்; ஓய்வு பெற்றவர்கள் அதற்காக உள்ள துறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

CGHS, விண்ணப்பதாரர் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பத்தை ஆய்வு செய்யும், இதில் ஊதிய அளவு மற்றும் CGHS விலக்கு, ஆதார் அட்டை, PAN அட்டை அல்லது வேறு ஏதேனும் செல்லுபடியாகும் அடையாள ஆவணம் ஆகியவை அடங்கும்.

அறிவிப்பு 4: மத்திய அரசு, 1995ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) திருத்தம் கொண்டு உள்ளது. ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு withdrawal benefits எனப்படும் திரும்பப் பெறும் பலன்களை வழங்குகிறது. பல்வேறு துறைகளில் பணிகளில் உள்ள சராசரியாக 7 லட்சம் பேருக்கும் அதிகமானோர் சந்தோசம் அடையும் வகையில் இபிஎப்ஓ விதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

நாடு முழுக்க உள்ள ஊழியர்களுக்கு இதற்கான செய்தியை மத்திய அரசு அனுப்பி உள்ளது. மத்திய அரசாங்க அறிக்கையின்படி, இந்தத் திருத்தம் ஆறு மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பு சேவையுடன் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு ஆனது. அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பின் வேலையை விட்டு விட்டு வெளியேறும் 7 லட்சத்திற்கும் அதிகமான EPS உறுப்பினர்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஒவ்வொரு மாதத்திற்கான சேவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதையும், வழங்கப்படும் சேவையின் விகிதத்தில் withdrawal benefits பலன்கள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில், அட்டவணை D ஐயும் மத்திய அரசு மாற்றியுள்ளது. அட்டவணை D என்பது திட்டத்தின் தகுதிக்கு தேவையான சேவையை வழங்காத உறுப்பினர்கள் அல்லது 58 வயதை எட்டிய உறுப்பினர்களைக் குறிக்கிறது.

இப்போது திரும்பப் பெறக்கூடிய தொகையானது ஒரு உறுப்பினர் சேவையை முடித்த மாதங்கள் மற்றும் EPS பங்களிப்பு பெறப்பட்ட ஊதியத்தைப் பொறுத்தது.

முன்னதாக, திரும்பப் பெறும் பலன், முடிந்த ஆண்டுகளில் பங்களிப்பு சேவையின் காலம் மற்றும் EPS பங்களிப்பு செலுத்தப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இதில் கட்டாய ஆறு மாத பங்களிப்பு சேவையும் அடங்கும். எனவே, ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மாதங்கள் ஒரு வேலையில் பங்களிப்பு சேவையை முடித்த பிறகு, உறுப்பினர்களுக்கு பலன்கள் வழங்கப்பட்டன. ஆறு மாதங்களுக்கு முன் திட்டத்தில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைக்காது. ஆனால் இனிமேல் அப்படி கிடையாது.

ஒரு பணியில் இருந்து 6 மாதங்களுக்கு முன் விலகினால் கூட withdrawal benefits கிடைக்கும். புதிய சட்டப்படி ஆறு மாதங்களுக்கு முன் திட்டத்தில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டு உள்ளன.

7 லட்சம் பேருக்கு சந்தோசம்: ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலை காலத்தை முடித்த பிறகு, உறுப்பினர்கள் withdrawal benefits பலனைப் பெறுவார்கள். ஆறு மாதங்களுக்கு முன் வேலையில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் பலன் பெற உரிமை இல்லை. கட்டாய சேவையை வழங்குவதற்கு முன்பு வெளியேறும் உறுப்பினர்களுக்கான withdrawal benefits கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கு இதுவே காரணம். 2023-24 நிதியாண்டில், வேலை பார்த்த காலம் ஆறு மாதங்களுக்கும் குறைவாக இருப்பதால், withdrawal benefits பலன்களுக்கான சுமார் 7 லட்சம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன என்று அறிக்கை கூறியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+