ரூ.5 கோடி கடன்.. சென்னையில் மருத்துவர் உட்பட 4 பேர் குடும்பத்துடன் தற்கொலை.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமங்கலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் பாலமுருகன், அவரின் மனைவி சுமதி மற்றும் 2 மகன்கள் என்று 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் பாலமுருகன். இவரது மனைவி சுமதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் இருக்கின்றனர். இதில் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி அளவிற்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது.

Chennai Suicide crime

இந்த நிலையில் குடும்பத்தினர் 4 பேரும் அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. பெற்றோருடன் சேர்ந்து மகன்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து உடல்களை கைப்பற்றிய போலீசார், உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கந்து வட்டி தொல்லை எதுவும் இருந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+