கன்னித்தீவு கதை போல் நீளும் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு... தொடரும் கைதுகள்
சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ஏ-தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள் என இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தேர்வு முறைகேட்டில் சிக்குவார்கள் என்பதால் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் 50 இடங்களுக்குள் தேர்ச்சியான நபர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இன்று சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தீபக், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த விநோத்குமார், கூடங்குளத்தை சேர்ந்த தேவி மற்றும் அருண் பாலாஜி ஆகிய நான்கு பேரிடமும் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது. அப்போது பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டதில் அவர்கள் நால்வரும் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. குரூப் 2 ஏ-தேர்வில் தீபக் 39-வது இடத்தையும், விநோத்குமார் 27-வது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமைச்செயலகத்தில் நிதித்துறையில் உதவியாளராக தீபக் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதேபோல் விநோத் குமார் வேலூர் மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார். தேவி நாகர்கோவிலில் அரசு ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் அனைவரும் இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை கொடுத்து தேர்வில் வெற்றிபெற்றவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
கன்னித்தீவு கதை போல் நீண்டுகொண்டே போகும் இந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 ஏ-தேர்வு முறைகேட்டில் இன்னும் பலர் சிக்கக்கூடும் எனத் தெரிகிறது. டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டங்கள், அறிக்கைகள் என இறங்கிவிட்டதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குரூப் 4-ஐ தொடர்ந்து குரூப் 2-விலும் மோசடி அரங்கேறியிருப்பது உண்மையாக படித்து தேர்வை சந்தித்தவர்களுக்கு பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications