பள்ளிக்கு போக போகும் 10,12ம் வகுப்பு மாணவர்களே .. பள்ளி கல்வி துறை சொன்ன ஹேப்பி நியூஸ்
சென்னை: தமிழகத்தில் 10,12ம் வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் 10,12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பாடங்கள் குறைக்கப்படுவதாக பள்ளி கல்விதுறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தீவிரமாக பள்ளிக்கல்வித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Recommended Video

தமிழகத்தில் கொரோனோ பொது முடக்கம் காரணமாக மார்ச் முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை ஆன்லைன் மூலமாகவே தற்போது வரை மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

குறைந்த கொரோனா
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து முன் வைக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் முதல்வர் தலைமையிலான ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 28ல் நடைபெற்றது.

முதல்வர் அறிவிப்பு
இதில் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டத்திற்குப் பின் ஜனவரி 19ல் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் நாளை மறுதினம் பள்ளி துவங்க உள்ளது இதையொட்டி தமிழகம் முழுவதும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பள்ளி திறப்பதிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்கள்
சுத்தம் செய்யும் பணி
பள்ளிக்கு மாணவர்களின் பாதுகாப்பிற்காக அரசு அறிவித்த நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்படும் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த சில நாட்களாக பள்ளிகளை சுத்தம் செய்யும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை சுத்தம் செய்தல் , மேசை நாற்காலி உள்ளிட்டவைகளுக்கு மருந்து தெளித்தல் , பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் , குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிக்கு மாணவர்களின் பாதுகாப்பிற்காக அரசு அறிவித்த நடைமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்படும் என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடத்திட்டம் குறைப்பு
நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் 10,12ம் வகுப்புகளுக்கு 40 சதவீதம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாட வாரியாக குறைக்கப்பட்ட பின் உள்ள பாடங்களை பள்ளி கல்விதுறை வெளியிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications