சென்னையில் 41 இடங்களில் இன்று ‛பவர்கட்’..சைதாப்பேட்டை மக்களே கவனம்.. இதோ முழு லிஸ்ட்
சென்னை: சென்னையில் பராமரிப்பு பணியின் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வில்லிவாக்கம், சேத்துப்பட்டு, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், மாடம்பாக்கம், சோழிங்கநல்லூர், எழும்பூர் உள்பட பல இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
சென்னையில் மின்வாரியம் சார்பில் தினமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (நவம்பர் 7) சென்னை சைதாப்பேட்டை பகுதிகளில் மின்சாரம் தடைப்பட உள்ளது.

இதுதொடர்பாக டேன்ஜெட்கோ எனும் தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையில் 07.11.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
அதன்படி சைதாப்பேட்டை பகுதியில் தாடண்டர் நகர், ஜோன்ஸ் சாலை, அண்ணசாலை பகுதி, அப்துல் ரசாக் தெரு, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை, சாஸ்திரி நகர், சிஐடி நகர் 1 மெயின் ரோடு, கிழக்கு, மேற்கு,வடக்கு மற்றும் தெற்கு சாலைகள், 70 அடி சாலை, பழைய மாம்பலம் ரோடு, கோடம்பாக்கம் ரோடு, காரணீஸ்வரர் கோவில் தெரு, சேஷாசலம் தெரு, போர்ட்டர் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
அதேபோல் திடீர் நகர், கொடமேடு, சாலவாயார் காலனி, அரசு பண்ணை, ஜோதியம்மாள் நகர், சாமியார் தோட்டம், அபித் காலனி, நெருப்பு மேடு, வி.எஸ் முதலி தெரு, ஜீனிஸ் சாலை, பூத்தெரு, ஜெயராம் தெரு, சின்னமலை பகுதியின் ஒரு பகுதி, பிராமின் தெரு, சவுந்தரரேஸ்வரர் கோவில் தெரு, புஜங்கராரோ தெரு, பாலா சிங் தெரு, சுப்பிரமணிய கோவில் தெரு, கேபி கோவில் தெரு, காரணி கார்டன், கோடம்பாக்கம் சாலை, கிருஷ்ணப்பன் நாயக்கன் தெரு, சுப்பிரமணியம் முதலி தெரு, விசாகத் தோட்டம் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications