தமிழகத்தில் மேலும் 471 பேருக்கு கொரோனா... சென்னையிலும் குறையும் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் 151 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 498 பேர் குணமடைந்துள்ளனர்.
Recommended Video
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஆட்டம் காட்டி வந்தாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது.
கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.
இந்திய ட்விட்டர் பொதுக் கொள்கை பெண் இயக்குனர் ராஜினாமா...காரணம் இது தானா ?
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். இதன்படி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 383 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 498 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 025 ஆக உயர்வடைந்து உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1,63,88,243 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 53,530 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 4,389 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.