தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக சுகாதாரச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    Beela Rajesh Family : பீலா ராஜேஷ் குடும்ப பின்னணி

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690 நேற்று வரை இருந்தது. இந்த நிலையில் இன்றைய நிலை குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    48 more cases positive corona today in tamilnadu

    அப்போது அவர் கூறுகையில் வீட்டு கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 60,739 ஆக உள்ளது. அது போல் அரசு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 230 ஆக உள்ளது.

    28 நாட்கள் வீட்டு கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 32075 ஆக உள்ளது. இதுவரை 6095 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டன. இன்று தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றிருந்தனர்.

    இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. இதவரை 21 பேர் குணமடைந்துள்ளனர். 738 பேரில் 4 பேர் மருத்துவர்கள் ஆவார். 5 பேரின் உடல்நிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் நிலை சீராக உள்ளது என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+