தமிழகத்தில் மேலும் 5,709 பேருக்கு கொரோனா உறுதி.. பாதிப்பு எண்ணிக்கை விட டிஸ்சார்ஜ் அதிகம்
சென்னை: தமிழகத்தில் மேலும் 5,709 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தினமும் 5000 முதல் 6000 வரை பரவி வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் கொரோனா நிலவரம் குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் இன்று புதிதாக 5709 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,49,654 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 5,698 பேருக்கும் வெளிநாடு, உள்நாட்டு விமானம் மூலம் தமிழகம் வந்தவர்கள், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என 11 பேருக்கும் சேர்த்து 5,709 பேர் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
கொரோனா தடுப்பு மருந்து...1 பில்லியன் டாலர் நிதி திரட்டுகிறது... சீரம் இன்ஸ்டிடியூட்!!
சோதனை
இன்று 67,025 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 38,45,803 பேரின் சளி மாதிரிகள் சோதனைக்குள்படுத்தப்பட்டன. இதுவரை 65,705 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அது போல் இதுவரை 37,12,657 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பெண்களுக்கு
இன்று தமிழகத்தில் 3,445 ஆண்களுக்கும், 2,264 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை 2.10 லட்சம் ஆண்களுக்கும், 1.38 லட்சம் பெண்களுக்கும் 29 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 136 பரிசோதனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.
கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ்
இன்று மட்டும் 5,850 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2,89,787 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது ஒரு ஆரோக்கியமான விஷயமாகும். இன்று கொரோனாவால் 121 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6,007 ஆக உள்ளது.
சென்னையில் நிலவரம்
சென்னையில் இன்று 1182 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 1,19,059 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடலூரில் 250 பேருக்கும், செங்கல்பட்டில் 344 பேருக்கும், குமரியில் 147 பேருக்கும் சேலத்தில் 286 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.