அங்கே பாருங்களேன்..நிலவுக்கு அருகே ஒரே நேர்கோட்டில் அணிவகுத்த 5 கிரகங்கள்..ஆச்சரியப்பட்ட மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வானத்தில் சில நேரங்களில் அதிசயங்கள் நிகழும். அப்படி ஒரு அதிசயம் நேற்றைய தினம் நிகழ்ந்தது. சூரிய அஸ்தமனத்திற்குப்பிறகு தொடுவானத்தின் மேற்கு பக்கத்தில் 5 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையாக இருந்ததை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

ராசி மண்டலத்தில் கும்ப ராசியில் சனி, மீன ராசியில் சூரியன், புதன், குரு, மேஷ ராசியில் ராகு, சுக்கிரன், மிதுனராசியில் சந்திரன், செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. துலாம் ராசியில் கேது பயணம் செய்கிறார்.

ஒன்பது கிரகங்களில் குரு, சுக்கிரன். செவ்வாய், புதன், சந்திரன் கிரகங்கள் வானத்தில் வரிசையாக ஒரே நேர்கோட்டில் இருந்தன. வானத்தில் பல நட்சத்திரங்களில் மின்னிய நிலையிலும் மேற்கு வானத்தில் இந்த 5 கிரகங்களின் அணிவகுப்பினை தெளிவாக காண முடிந்தது.

 5 கிரகங்கள் அணிவகுப்பு

5 கிரகங்கள் அணிவகுப்பு

சூரியன் மறைந்த பின்னர் மேற்கு பகுதியில் கிரகங்கள் வரிசையாக காட்சி அளித்தன. வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றை தெளிவாக பார்த்து ரசித்தனர். சந்திரனும் மேற்கு வானத்தில் பிரகாசமாக ஒளிர்ந்த போது இந்த கிரகங்களின் கூட்டணியை வானத்திலும் தெளிவாக வரிசையாக வெறும் கண்களால் கண முடிந்தது.

செவ்வாய் அருகில் நிலவு

செவ்வாய் அருகில் நிலவு

அதிலும் செவ்வாய் கிரகம் செந்நிறத்தில் நிலவுக்கு அருகில் சிவப்பு நிறத்தில் சுடராக ஒளிந்தது. யுரேனஸ், புதன் கிரகங்களையும் சுக்கிரனுக்கு மேலே பச்சையாக ஒளிர்ந்தது. கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 6 கிரகங்கள் அதிகாலையில் கிழக்குப் பகுதியில் வரிசையாக தோன்றின. நேற்றைய தினம் மேற்கில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றின. இனி 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த அதிசய காட்சியை காண முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

 ஒரே ராசியில் கிரகங்கள்

ஒரே ராசியில் கிரகங்கள்

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அப்போது ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் சஞ்சரித்தன. சூரியன், சனி, கேது, குரு, புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்திருக்க கூடவே சூரிய கிரகணமும் நிகழ்ந்தது. அது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் அப்போது கணித்தனர்.ஜோதிடர்கள் சொன்னது போலவே கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகத்தை தாக்கியது. மக்கள் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டனர். பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.

ஒரே வரிசையில் கிரகங்கள்

ஒரே வரிசையில் கிரகங்கள்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் சுக்கிரன், குரு, சனி, செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் வரிசையாக அணிவகுத்தன. பூமியில் இருந்து இதை வெறும் கண்களால் காண முடிந்தது. இந்த ஆண்டு இதுபோல கிரகங்களின் அணிவகுப்பு நிகழப்போகிறது. பொதுவாக இதுபோன்ற கிரகங்களின் சேர்க்கை அணிவகுப்பின் போது ஏதாவது ஒரு அதிசயம் நிகழும். சில நேரங்களில் நிலநடுக்கம், பூகம்பம், சுனாமி போன்ற மிகப்பெரிய விபத்துக்கள் கூட நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு ஒரே வரிசையில் 5 கிரகங்கள் இணைந்து செவ்வாய் கிழமையான நேற்றைய தினம் வானில் தோன்றியதால் ஏதேனும் விபரீதம் நிகழுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+