+2 பொதுத் தேர்வு! 50,000 மாணவர்கள் தமிழ் தேர்வில் ஆப்செண்ட்! தமிழ்நாட்டில் தமிழுக்கு வந்த சோதனை!
இதென்ன தமிழ்நாட்டில் தமிழுக்கு வந்த சோதனை
சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் 50,674 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வராதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வை பொறுத்தவரை தமிழ்நாட்டில் தமிழ் மொழிப் பாடத்துக்கு வந்த சோதனையாகவே பார்க்கப்படுகிறது.
இவ்வளவு பேர் ஏன் தமிழ் தேர்வை எழுத வரவில்லை, என்ன காரணங்கள் என்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

+2 பொதுத் தேர்வு
இந்த ஆண்டுக்கான +2 பொதுத் தேர்வு நேற்று முன் தினம் 13ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதும் நிலையில் 50,674 பேர் தமிழ் பரீட்சையை எழுத வரவில்லை. கடந்தாண்டு தமிழ் தேர்வை 32,000 பேர் எழுத வராத நிலையில் இந்தாண்டு அதன் எண்ணிக்கை கூடுதலாக உயர்ந்திருப்பது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

என்ன காரணம்?
இதனிடையே இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்வெழுத வரவில்லை, தனியார் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்வெழுத வரவில்லை, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதிகாரிகள். இந்த நிகழ்வை பொறுத்தவரை தமிழ்நாட்டில் தமிழ் மொழிப் பாடத்துக்கு வந்த சோதனையாகவே பார்க்கப்படுகிறது.

தேர்வெழுத பயம்
தேர்வு எழுத பயம், இன்புளூயன்ஸா வைரஸ் பரவுவதால் ஏற்படும் உடல்நலமின்மை, உள்ளிட்ட காரணங்கள் மேலோட்டமாக கூறப்பட்டாலும் அதற்காக 50,674 பேர் தேர்வை புறக்கணித்திருப்பது மிகத் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. தமிழ் மொழிப் பாடத்திற்கே இந்த நிலை என்றால் இன்னும் கணக்கு, அறிவியல், உள்ளிட்ட பாடங்களின் தேர்வில் எத்தனை பேர் ஆப்செண்ட் ஆகப் போகிறார்களோ என்ற பதைபதைப்பு பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

பேசு பொருள்
தமிழ்நாட்டில் தமிழ் மொழி பாடத்தை இத்தனை பேர் புறக்கணித்திருப்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே எங்கே குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது என்பதை விசாரணை மூலம் கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications