கொரோனா தடுப்பூசி இரண்டாம் கட்ட பணிகள்.. இதுவரை 50 லட்சம் பேர் பதிவு
சென்னை: கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்டத்தில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள சுமார் 50 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் என மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதைத்தொடர்ந்து தடுப்பூசி பணிகளின் இரண்டாம் கட்டம் மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. 60 வயதைக் கடந்தவர்களும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

50 லட்சம் பேர் முன்பதிவு
இதற்கான முன்பதிவு கோ-வின் தளத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்ட பணிகள் குறித்துப் பேசிய கொரோனா தடுப்பூசி நிர்வாக குழுவின் தலைவர் ஆர்.எஸ்.சர்மா, "இந்த அமைப்பில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை. தற்போதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ள 50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

கோ-வின் தளம்
கோ-வின் தளம் முதலில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டபோது, அதில் சில குறைபாடுகள் இருந்தன. ஆனால் அவை தற்போது முற்றிலுமாக சரி செய்யப்பட்டுவிட்டது. அதிக நபர்கள் முன்பதிவு செய்யும்போதும் அதைத் தாங்கும் வகையிலேயே கோ-வின் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள 6இல் 1 நபருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. இது மிகப் பெரிய ஒரு திட்டம்" என்றார்.

கொரோனா தடுப்பூசி
தற்போதுவரை நாடு முழுவதும் 1,48,55,073 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 67,04,856 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 25, 98,192 சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 53,43,219 முன் களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல 60 வயதைக் கடந்த மற்றும் 45 வயதைக் கடந்த உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களில் 2,08,791 பேருக்கு தற்போதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 15,593 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 1.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல நேற்று 97 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை நாட்டில் 1.57 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications