தமிழகத்தில் மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 510 பேர் டிஸ்சார்ஜ்!
சென்னை: தமிழகத்தில் மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,56,246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இன்றைய தினம் மருத்துவமனையில் 4,073 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று தமிழகத்தில் மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,56,246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 55,134 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இது வரை 1,79,55,850 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று 54, 964 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 1,76,38,302 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று 329 ஆண்களுக்கும், 240 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 5,17,323 ஆண்களுக்கும் 3,38,888 பெண்களுக்கும் 35 திருநங்கைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 257 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இன்று 510 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை 8,39,648 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்கள். இன்று 4 பேர் கொரோனா வைரஸால் பலியாகிவிட்டனர். இதுவரை 12,525 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் இன்று 236 பேருக்கும் அரியலூரில் 2 பேருக்கும் செங்கல்பட்டில் 48 பேருக்கும், கோவையில் 55 பேருக்கும், கடலூரில் 5 பேருக்கும், திண்டுக்கல்லி 7 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 28 பேருக்கும், சேலத்தில் 19 பேருக்கும் தஞ்சையில் 20 பேருக்கும், திருவள்ளூரில் 30 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இதுவரை 237444 பேரும், அரியலூரில் இதுவரை 4749 பேரும் செங்கல்பட்டில் 53270 பேரும், கோவையில் 56182 பேரும் கடலூரில் 25243 பேரும், தருமபுரியில் 6665 பேரும் ஈரோட்டில் 14890 பேரும் சேலத்தில் 32835 பேரும் காஞ்சிபுரத்தில் 29631 பேரும் திருவள்ளூரில் 44437 பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications