அமைச்சரின் மகன்-பேரனை தாக்கியது ஏன்? சரணடைந்த 6 பேர் பரபர வாக்குமூலம்.. தியேட்டரில் நடந்தது என்ன?
சென்னை: சென்னையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மகன், பேரன் மீது திரையரங்கில் வைத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்தப்பட்டது ஏன்? என்பது பற்றி அவர்கள் போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். இவரது மகன் பெயர் ரமேஷ். பேரன் பெயர் கதிர்.
இந்நிலையில் தான் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பார்க்க ரமேஷ், கதிர் ஆகியோர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏஜிஎஸ் திரையரங்குக்கு சென்றனர். தியேட்டரில் அவர்கள் இரவு நேர காட்சியை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த 6 பேருக்கும், ரமேசுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனை முற்றவே அந்த கும்பல் ரமேஷ் மற்றும் கதிரை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றது.
இதில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் கதிர் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அதாவது ரமேஷ் இருக்கைக்கு அருகே 6 பேர் அதிக சத்தம் எழுப்பி விசிலடித்து ஆபாசமாக பேசிக்கொண்டும் கூச்சலிட்டுள்ளனர். இதனால் மற்றவர்களுக்கு படம் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரமேஷ் அவர்களை கொஞ்சம் அமைதியாக இருந்து படம் பார்க்கும்படி கூறிய நிலையில் தகராறு ஏற்பட்டு அவர்கள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அமைச்சரின் குடும்பத்தினர் என்பதால் இது இயல்பான பிரச்சனையில் தாக்குதல் நடத்தப்பட்டதா? இல்லாவிட்டால் பின்னனியில் பிற காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமானது. இந்நிலையில் தான் அமைச்சரின் மகன், பேரன் ஆகியோரை தாக்கிய 6 பேர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இரவில் வழக்கறிஞருடன் சென்று சரணடைந்தனர்.
ராகுல், ரகு, அனு, கவுதம் உள்பட 6 பேர் போலீசில் சரணடைந்த நிலையில் தியேட்டரில் நடந்த சம்பவம் குறித்து சில விஷயங்களை தெரிவித்துள்ளனர். அதாவது தியேட்டர் இருக்கையில் மாறி அமர்ந்த விவகாரத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், பிரச்சனையின்போது யாரும் மதுபானம் அருந்தியிருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். தற்போது அவர்கள் 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications