அந்த கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன்.. இந்த கோட்டை தாண்டி நீயும் வரக் கூடாது.. கொரோனா பரிதாபங்கள்
சென்னை: சமூக ஒன்று கூடல் என்பதை தவிர்க்கும் விதமாக ஒரு வங்கியில் கவுன்ட்டர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே கயிறு மூலம் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் உலுக்கி வருகிறது. உயிர் கொல்லி வைரஸான இதை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.
கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவி விட்டது. இந்தியாவில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் பலியாகிவிட்டனர்.

என்ன அறிவுரைகள்
கொரோனாவைத் தடுக்க அரசு கூறும் அறிவுரைகள் என்னவென பார்ப்போம். காய்ச்சல், சளி, தொண்டை வலி ஆகியவை இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும். அது போல் யாராவது வெளிநாடுகளிலிருந்தோ கொரோனா பாதித்த மாநிலங்களிலிருந்தோ வந்தால் இந்த அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி ரத்து
அது போல் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஒரு மீட்டர் இடைவெளியிலாவது நின்று பேச வேண்டும். அவர்கள் பயன்படுத்திய பொருட்களை தொடக் கூடாது. பயன்படுத்தக் கூடாது. அது போல் சமூக ஒன்று கூடல்களை தவிர்க்க வேண்டும். அதாவது திருமணம், பொதுக் கூட்டம், இதர நிகழ்ச்சிகளுக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். தற்போது மண்டபங்களுக்கும் எந்த வித நிகழ்ச்சியையும் புக் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்லூரி
பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுவிட்டன. எனினும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பொதுமக்கள் புழங்கும் ஆர்டிஓ, வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலகங்களில் பொது மக்கள் வருகை குறைந்துள்ளது. அது போல் பொதுமக்கள் வந்து செல்லும் வங்கிகளிலும் கூட்டம் குறைந்துள்ளது.

மாற்றுக் கருத்து
புதிய நபர்களுடன் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பேச வேண்டும் என்பதால் கார்ப்பரேஷன் வங்கி ஒன்றில் கவுன்ட்டர்களுக்கும் வாடிக்கையாளர்கள் நிற்கும் இடத்திற்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளியில் கயிறு மூலம் கட்டியுள்ளனர். இதை பார்க்கும் போது வடிவேல் ஒரு படத்தில் "டேய் அந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன், இந்தக் கோட்டை தாண்டி நீயும் வரக் கூடாது. பேச்சு பேச்சா இருக்கனும்" என்பார். அதுபோல் இருக்கிறது. எனினும் இதுவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications