சென்னை கொளத்தூரில் அதிர்ச்சி! சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டி தூக்கிய மாடு.. பரபரப்பு வீடியோ
சென்னை: சென்னை கொளத்தூர் பகுதியில் மகளுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை மாடு ஒன்று முட்டி தூக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாக பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு சில சமயங்களில் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றது. தெருவில் மேயவிடப்படும் மாடுகள் சில சமயங்களில் சாலையில் நடந்து செல்பவர்களை முட்டி தூக்குகிறது. வாகனங்களில் செல்பவர்களையும் முட்டித் தூக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன.

இந்த நிலையில் சென்னை கொளத்தூர் பகுதியில் சாலையில் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை மாடு ஒன்று முட்டி தூக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பதை பதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், "8 வயது மதிக்கத்தக்க தன் மகளுடன் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது சாலையில் கன்றுக்குட்டியுடன் பசு மாடு ஒன்று சென்றுகொண்டிருந்தது. பசு மாட்டை பார்த்ததும், பயந்துபோன இந்த பெண் தன் மகளை சாலையின் ஓரமாக அழைத்து சென்று கடந்து செல்ல முயன்றார். ஆனால் திடீரென அந்த மாடு சிறுமியை முட்டி தாக்க முயன்றது. இதைப் பார்த்ததும் பதறிப்போன அந்த தாய் மகளை மறைத்து தப்பி செல்ல முயன்றார்.
எனினும் அந்த மாடு விடாமல் அந்த பெண்ணை ஆக்ரோஷமாக முட்டி தாக்கியது. தொடர்ந்து மாறி மாறி கொம்பால் முட்டி தூக்கி போட்டது. இதற்கிடையே அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் உள்பட பொதுமக்கள் போராடி அந்த மாட்டை அங்கிருந்து விரட்டி விட்டு பெண்ணை மீட்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கொளத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை மாடு ஆக்ரோஷமாக முட்டி தூக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கடுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. எனினும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications