Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை கொளத்தூரில் அதிர்ச்சி! சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டி தூக்கிய மாடு.. பரபரப்பு வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொளத்தூர் பகுதியில் மகளுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை மாடு ஒன்று முட்டி தூக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாக பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு சில சமயங்களில் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றது. தெருவில் மேயவிடப்படும் மாடுகள் சில சமயங்களில் சாலையில் நடந்து செல்பவர்களை முட்டி தூக்குகிறது. வாகனங்களில் செல்பவர்களையும் முட்டித் தூக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன.

Chennai cow

இந்த நிலையில் சென்னை கொளத்தூர் பகுதியில் சாலையில் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை மாடு ஒன்று முட்டி தூக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பதை பதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், "8 வயது மதிக்கத்தக்க தன் மகளுடன் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது சாலையில் கன்றுக்குட்டியுடன் பசு மாடு ஒன்று சென்றுகொண்டிருந்தது. பசு மாட்டை பார்த்ததும், பயந்துபோன இந்த பெண் தன் மகளை சாலையின் ஓரமாக அழைத்து சென்று கடந்து செல்ல முயன்றார். ஆனால் திடீரென அந்த மாடு சிறுமியை முட்டி தாக்க முயன்றது. இதைப் பார்த்ததும் பதறிப்போன அந்த தாய் மகளை மறைத்து தப்பி செல்ல முயன்றார்.

எனினும் அந்த மாடு விடாமல் அந்த பெண்ணை ஆக்ரோஷமாக முட்டி தாக்கியது. தொடர்ந்து மாறி மாறி கொம்பால் முட்டி தூக்கி போட்டது. இதற்கிடையே அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் உள்பட பொதுமக்கள் போராடி அந்த மாட்டை அங்கிருந்து விரட்டி விட்டு பெண்ணை மீட்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து கொளத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை மாடு ஆக்ரோஷமாக முட்டி தூக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கடுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. எனினும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+