பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பா? சரக்கு ரயிலில் உக்கிரம் அடையும் தீ.. ஸ்பாட்டுக்கு ஓடிவந்த ஆட்சியர்!
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் கொண்டு சென்ற டேங்கர் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் அறிந்து உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்த ஆட்சியர் பிரதாப், மொத்தமாக உள்ள 52 பெட்டிகளில் 47 பெட்டிகளை கழற்றி தனியாக பிரித்துவிட்டதாகவும், தீயை அணைக்க தண்ணீருக்கு பதிலாக ஃபோம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை எண்ணூரில் இருந்து மும்பைக்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு 52 டேங்கர்களுடன் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில் திடீரென தீப்பற்றியது. இதனைத் தொடர்ந்து தீ அடுத்தடுத்த பெட்டிகளில் தீ பரவிக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு துறையினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சென்னை செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அந்த வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் நலன் கருதி அவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டேங்கர் ரயில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அறிந்து உடனடியாக மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஸ்பாட்டுக்கு விரைந்துள்ளார். இதன்பின் தீ விபத்தை பார்வையிட்ட அவர் உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்தது.
இதன் காரணமாக தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமான விஷயமென்றால் தீ பரவாமல் இருக்க, 4 பெட்டிகளை மட்டும் விட்டுவிட்டு, மற்ற 47 பெட்டிகளையும் உடனடியாக பிரித்துவிட்டோம். இதனால் தீயை விரைவாக கட்டுப்படுத்தும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. அதேபோல் எண்ணெய் என்பதால் தண்ணீர் மூலமாக தீயை அணைக்க முடியாது.
இதனால் ஃபோம் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 வாகனங்கள் வந்துவிட்டன. இன்னும் கூடுதல் வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அருகில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளை வேறு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல் போக்குவரத்து துறை சார்பாகவும் மக்கள் எங்கும் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் பொதுமக்களையும் அப்புறப்படுத்தி பெரியகுப்பம் அரசுப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில்வே போலீஸ் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications