டிரைவர் அதிமுகக்காரர்.. அதனால்தான் பேசின் பிரிட்ஜ் மழைநீரில் பஸ் சிக்கியது! திமுக கவுன்சிலர் ஒரேபோடு
சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் மூலகொத்தளம் ரயில்வே மேம்பாலாத்தில் தேங்கி நின்ற மழை நீரில் அரசு பேருந்து சிக்கிய சம்பவம் பேசுபொருளானது. இது குறித்து விளக்கமளித்த அப்பகுதி திமுக கவுன்சிலர், "பேருந்து ஓட்டுநர் அதிமுக கட்சியை சேர்ந்தவர்" என குற்றம்சாட்டியுள்ளார்.
சுரங்க பாதையில் மழைநீர்: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையிலும் மழை நீடித்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆனால் மழை நின்றவுடன் நீர் முற்றிலுமாக வடிந்துவிட்டது. அதேபோல சுரங்கபாதையில் மழை நீர் தேங்காதவாறு மோட்டார் அமைத்து மாநகராட்சி ஊழியர்கள் நீரை வெளியேற்றி வருகின்றனர்.

சிக்கிய பேருந்து: இப்படி இருக்கையில் சென்னை மூலகொத்தளம் ரயில்வே மேம்பாலத்தில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக நீர் தேங்கியிருந்திருக்கிறது. அப்போது அவ்வழியாக வந்த பேருந்து சுரங்கபாதையை கடக்க முயல்கையில், மழைநீரில் சிக்கியிருக்கிறது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் பேருந்து அங்கிருந்து கொஞ்சம் கூட நகரவில்லை. இதனையடுத்து பேருந்தை மீட்க அதிகாரிகள் முயன்று வந்திருக்கிறார்கள்.
அதிமுக டிரைவர்: இது குறித்து விளக்கமளித்துள்ள திமுக கவுன்சிலர், "பேருந்து ஓட்டுநர் அதிமுக கட்சியை சேர்ந்தவர்" என குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, "சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 3 மோட்டார்கள் செயல்பட்டு வருகின்றன. பம்ப் ஆப்ரேட்டர்கள் நேற்றிலிருந்து இங்கே இருந்து வேலை செய்து வருகிறார்கள். இங்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது என்பது தெரிந்தும் டிரைவர் பஸ்ஸை உள்ளே விட்டிருக்கிறார். அவர் அதிமுக டிரைவர் வேண்டும் என்றே பழி வாங்க இப்படி செய்திருக்கிறார்" என கவுன்சிலர் வேளாங்கண்ணி கூறியுள்ளார்.
கோரிக்கை: இதனையடுத்து பேருந்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் மற்ற சுரங்கபாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதேபோன்ற நடவடிக்கையை பேசின் பிரிட்ஜ் மூலகொத்தளம் பகுதியிலும் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
நீடிக்கும் மழை: நிலைமை இவ்வாறு இருக்கையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது இன்று மழையை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும் நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 24ம் தேதியை பொறுத்த அளவில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications