ரூ.80 லட்சம்.. 1500 சதுர மீ.. பிரம்மாண்டமாக அமையும் கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம்! என்ன சிறப்பு?
ரூ.80 லட்சத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு மாவட்ட மற்றும் மாநில கடலோர மண்டல மேலாண்மை குழு அனுமதியளித்துள்ளது.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட வளாகத்தில் 1,500 சதுர மீட்டர் பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதன் ஒரு பகுதி தாழ்தளத்தில் அமைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் மெரினாவில் கருணாநிதி நினைவிட வளாகம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுமார் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் இந்த நினைவிடம் அமைக்கப்பட இருக்கிறது. அதேபோல நினைவிடத்தின் அருகில் வங்கக்கடலில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா சின்னம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் நடத்திய கருத்துக்கேட்பு கூட்டம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 31ம் தேதி கலைவாணர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டத்தில் பேனா சின்னத்தை வைப்பதற்கு சமூக ஆர்வலர்களும், சூழலியல் செயற்பாட்டாளர்களும், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பேனா நினைவுச் சின்னம் நிச்சயம் வைக்கப்படும் என்று திமுகவினர் கூறினர்.
இந்த பரபரப்புக்கிடையில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கருணாநிதி நினைவிட வளாகத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இதற்கு ஒப்புதல் அளிக்கக்கோரி மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழுவை அணுகியது. இதற்கான ஒப்புதலை அளித்த மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழு, மாநில கடலோர மண்டல மேலாண்மை குழுவுக்கு கருத்துருவையும் பரிந்துரைத்தது. இதனையடுத்து இறுதியாக மாநில கடலோர மண்டல மேலாண்மை வல்லுநர் குழுவினர் இந்த திட்டம் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

கேள்விக்கு உரிய பதில் கொடுக்கப்பட்டதையடுத்து இக்குழு அருங்காட்சியகத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஒப்புதல்கள் கிடைத்ததையடுத்து 1,500 ச.மீ பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் கருணாநிதியின் வாழ்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், அவருடைய இலக்கியம், கதை வசனம், அவர் ஆட்சியில் இருந்தபோது தொடங்கிய திட்டங்கள், எழுத்தோவியங்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அதேபோல தாழ்தளத்திலும் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி அமைக்கப்பட்டிருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி உயிரிழந்தார். அவரு உடல் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications