சின்ன பார்சலே 15 கோடி ரூபாய் சார்.. அயர்ன் சூர்யாவுக்கே அண்ணன்.. சென்னை ஏர்போர்ட்டே ஆடிப்போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையில் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாகும்.. இங்கு லட்சக்கணக்கான பயணிகள் ஆண்டு தோறும் பயணிக்கிறார்கள். 24 மணி நேரமும் மிகவும் பிஸியான விமான நிலையமாக உள்ள சென்னையில் போதைப்பொருள் கடத்துவோரை பிடிக்கவும், தங்கம் கடத்துவோரை பிடிக்கவும் அதிநவீன முறையில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தொழில் மேற்கொள்வது சவாலான ஒன்றாக உள்ளது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையில் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாகும்.. இங்கு லட்சக்கணான பயணிகள் ஆண்டு தோறும் பயணிக்கிறார்கள். 24 மணி நேரமும் மிகவும் பிஸியான விமான நிலையமாக உள்ள சென்னையில் போதைப்பொருள் கடத்துவோரை பிடிக்கவும், தங்கம் கடத்துவோரை பிடிக்கவும் அதிநவீன முறையில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தொழில் மேற்கொள்வது சவாலான ஒன்றாக உள்ளது.

A powder worth 15 crores seized at Chennai airport: How did the Indonesian traveler get caught?

இப்படியான சூழலில் சிங்கப்பூரில் இருந்து வரும் ஒரு பயணி, பெரும் அளவில் போதை பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது ஒவ்வொரு பயணியாக சோதித்த போது, இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த அகமது இட்ரீஸ் (வயது 28) என்பவர் சுற்றுலா விசாவில் லாவோஸ் நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சென்னை வந்திருந்தார்.. அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த போது பலமுறை தாய்லாந்து, எத்தியோப்பியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணி விசாவில் அடிக்கடி சென்னை வந்து விட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, இந்தோனேசியா பயணி மீது சந்தேகம் அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை தீவிரமாக விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சுங்க இலாகா அலுவலக அறைக்கு அழைத்து சென்று அவரது உடைமைகள் மற்றும் உள்ளாடைகளை சோதனையிட்டனர்.

உள்ளாடைக்குள் சிறிய பார்சல் ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அதை பிரித்து பார்த்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், போதைப் பவுடர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பயணி அகமது இட்ரீஸ் அதிகாரிகளிடம் அது போதைப்பொருள் அல்ல, உடலுக்கு சக்தி தரும் ஊட்டச்சத்து பவுடர் என்று கூறி பிடிவாதமாக பேசி வந்தார். 3 கிலோ பவுடரை எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்த போது உயர் ரக கொக்கைன் போதைப்பொருள் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக இந்தோனேசிய பயணி அகமது இட்ரீசை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தோனேசிய பயணி அகமது இட்ரீ. சுற்றுலா பயணி விசாவில் அடிக்கடி சென்னை வந்து விட்டு சென்றதால், இதேபோல் போதை பொருள் கடத்தி வந்தாரா.. இவர் சர்வதேச போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+