Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் என்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனது இல்லை.. அண்ணா பல்கலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் என்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனது கிடையாது என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கல்லூரி விழாவில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இவர் ஆஸ்கர் பெற்ற போது எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றார். அந்த அளவுக்கு கடவுள் நம்பிக்கையும் கொண்டவர்.

A.R.Rahman says that he never go to college to study

ஆங்கிலத்திற்கு இணைப்பு மொழி இந்தி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய போது தமிழ்தான் இணைப்பு மொழி என உரக்க சொன்னவர் ஏ.ஆர்.ரஹ்மான். சமூகம் சார்ந்த விஷயங்களிலும் இவர் அவ்வப்போது கருத்து சொல்வதுண்டு.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. அதில் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த முதல் பாகம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலுடன் இந்த கதை ஒத்து போகவில்லை என சிலர் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் இயக்குநர் மணிரத்னமோ பொன்னியின் செல்வன் நாவலை படித்துவிட்டு அதில் உள்ள விஷயங்களை கமர்சியலாக சொல்லியுள்ளதாக விளக்கம் அளித்தார். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டிருந்தது. அதில் இயக்குநர் மணிரத்னம் வென்றார். தற்போது இரண்டாவது பாகம் வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்தில் அக முக எனும் பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடல் ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது. இதனால் அந்த பாடல் எப்படி படமாக்கியுள்ளார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த இரண்டாவது பாகம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் நீளம் கொண்டது என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் PS2 Anthem வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது.

இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில் நான் என்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனதில்லை. ஆகவே எந்த கல்லூரிக்கு அழைத்தாலும் நான் மிகவும் உற்சாகமாகிவிடுவேன். இங்கு இருக்கும் மாணவர்கள்தான் நாளைய எதிர்காலம். அதை கட்டமைக்க போகிறவர்கள் இவர்கள்தான். விக்ரம் இந்த மேடையில் என்னுடைய பாடலை பாடினார்.

ஆனால் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் இருந்து நான் தைரியத்தை எடுத்துக் கொண்டேன். ஒரு முறை விக்ரம் நடித்த கரிகாலன் கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு அவரை போலவே கத்தியெல்லாம் வைத்துக் கொண்டு நகைச்சுவை செய்து இருக்கிறேன். இந்த பாகத்திற்கான பின்னணி இசையை 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். இதை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியுள்ளோம்.

பாலி, லண்டன், துபாய், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் இந்த பாடலுக்காக வொர்க் செய்துள்ளோம். இந்த கீதம் மணி சாரின் ஐடியாதான். இந்தியில் அர்ஜித் சிங் பாடியுள்ளார், தமிழில் என்னை பாட சொன்னார்கள். இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார். ஆஸ்கர் நாயகனாக இருந்தாலும் தான் கல்லூரிக்கு போனதில்லை, கல்லூரி படிப்பை படித்ததில்லை என்பதை கூறியது மாணவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+