நான் என்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனது இல்லை.. அண்ணா பல்கலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு
சென்னை: நான் என்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனது கிடையாது என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கல்லூரி விழாவில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இவர் ஆஸ்கர் பெற்ற போது எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றார். அந்த அளவுக்கு கடவுள் நம்பிக்கையும் கொண்டவர்.

ஆங்கிலத்திற்கு இணைப்பு மொழி இந்தி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய போது தமிழ்தான் இணைப்பு மொழி என உரக்க சொன்னவர் ஏ.ஆர்.ரஹ்மான். சமூகம் சார்ந்த விஷயங்களிலும் இவர் அவ்வப்போது கருத்து சொல்வதுண்டு.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. அதில் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த முதல் பாகம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலுடன் இந்த கதை ஒத்து போகவில்லை என சிலர் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இயக்குநர் மணிரத்னமோ பொன்னியின் செல்வன் நாவலை படித்துவிட்டு அதில் உள்ள விஷயங்களை கமர்சியலாக சொல்லியுள்ளதாக விளக்கம் அளித்தார். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டிருந்தது. அதில் இயக்குநர் மணிரத்னம் வென்றார். தற்போது இரண்டாவது பாகம் வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்தில் அக முக எனும் பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடல் ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது. இதனால் அந்த பாடல் எப்படி படமாக்கியுள்ளார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த இரண்டாவது பாகம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் நீளம் கொண்டது என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் PS2 Anthem வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில் நான் என்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனதில்லை. ஆகவே எந்த கல்லூரிக்கு அழைத்தாலும் நான் மிகவும் உற்சாகமாகிவிடுவேன். இங்கு இருக்கும் மாணவர்கள்தான் நாளைய எதிர்காலம். அதை கட்டமைக்க போகிறவர்கள் இவர்கள்தான். விக்ரம் இந்த மேடையில் என்னுடைய பாடலை பாடினார்.
ஆனால் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் இருந்து நான் தைரியத்தை எடுத்துக் கொண்டேன். ஒரு முறை விக்ரம் நடித்த கரிகாலன் கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு அவரை போலவே கத்தியெல்லாம் வைத்துக் கொண்டு நகைச்சுவை செய்து இருக்கிறேன். இந்த பாகத்திற்கான பின்னணி இசையை 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். இதை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியுள்ளோம்.
பாலி, லண்டன், துபாய், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் இந்த பாடலுக்காக வொர்க் செய்துள்ளோம். இந்த கீதம் மணி சாரின் ஐடியாதான். இந்தியில் அர்ஜித் சிங் பாடியுள்ளார், தமிழில் என்னை பாட சொன்னார்கள். இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார். ஆஸ்கர் நாயகனாக இருந்தாலும் தான் கல்லூரிக்கு போனதில்லை, கல்லூரி படிப்பை படித்ததில்லை என்பதை கூறியது மாணவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications