சம்பந்தமேயில்லாம புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிர்மலா.. கனகச்சிதமாக திருக்குறளை சுட்டி காட்டிய ஆ ராசா
Recommended Video
டெல்லி: பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சம்பந்தமேயில்லாமல் புறநானூற்றை மேற்கோள்காட்டிய நிலையில் தற்போது வரி விதிப்புக்கு கனகச்சிதமாக திருக்குறளை நீலகிரி எம்பியும் முன்னாள் அமைச்சருமான ஆ. ராசா சுட்டிக் காட்டியுள்ளார்.
2019- 2020-ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் அறிக்கைகள் கொண்டு வரப்படும் சூட்கேஸுக்கு பதிலாக நிர்மலா துணிப்பையில் பட்ஜெட் உரை கொண்டு வந்ததால் பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது.
மேலும் பட்ஜெட் உரையை வாசித்த போது புறநானூற்றில் உள்ள யானை புக்க புலம் போல என தொடங்கும் பாடலை மேற்கோள்காட்டினார். இந்த பாடல் அதிக வரி வசூலித்த பாண்டிய மன்னன் அறிவுடைநம்பிக்கு அறிவுறுத்தும் விதமாக சங்கக் காலப் புலவரான பிசிராந்தையார் பாடினார்.

பட்ஜெட் மீதான விவாதம்
தமிழ்ப் பாடலை சரியாக பாடியமைக்கு லோக்சபாவில் அவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நேற்றைய தினம் லோக்சபாவில் நடந்தது.

மீண்டும் படித்து பார்த்தேன்
அப்போது நீலகிரி எம்.பி. ஆ ராசா பேசுகையில் புறநானூற்று பாடலை மேற்கோள்காட்டியதன் மூலம் நிர்மலா சீதாராமன் சரியான தகவலை தெரிவித்துள்ளார். அந்த பாடலை நான் மீண்டும் மீண்டும் படித்து பார்த்தேன். அது வரி வசூலிக்கும் முறை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்பில்லை
ஆனால் நாங்கள் கவலைப்படுவதெல்லாம் வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்துதான். எங்கிருந்து வரியை பெறுவது, எப்படி வரிவிலக்கு அளிப்பது என்பது குறித்துதான் கவலையே. எனவே இதற்கும் நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டிய பாடலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

காத்தலும் வகுத்தலும்
எனவே வரியை எவ்வாறு வசூலிப்பது என்பது குறித்த திருக்குறளில் உள்ள சரியான பாடலை நான் அமைச்சருக்கு தெரிவிக்க விரும்புகிறேன். "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு" என்ற வரியை சுட்டிக் காட்டினார்.

4 அம்சங்கள்
இதன் பொருள் என்னவென்றால், உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் ஆகிய நான்கையும் மன்னன் செய்ய வேண்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை இந்த 4 அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் முற்றிலும் இல்லை என தெரிவித்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications