இது ஒன்னு போதும்.. மக்களின் அவஸ்தையை சொல்ல.. வைரலாகும் வீடியோ!
Recommended Video
சென்னை: ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. இந்த ஒரு வீடியோ போதும்.. மக்களின் அவஸ்தையை சொல்ல! தமிழ்நாடுன்னு மட்டும் தெரியுது.. ஆனா எந்த ஊர்னு தெரியல.
ரொம்ப பெரிய ரோடும் இல்லாம, ரொம்ப சின்ன ரோடும் இல்லாம, பொதுவா இருக்கிற ரோடு இது! பஸ், கார், லாரியெல்லாம் போற மாதிரிதான் பரபரப்பாக இருக்கு.
அப்படி யாரோ ஒருத்தர் இந்த ரோடில் போகும்போதுதான் வீடியோ எடுத்திருக்கார். குழாயில் பெண்கள் தண்ணீர் பிடித்து கொண்டிருக்கிறார்கள். 10 குடம் இல்லை 20 குடம் இல்லை.. நூற்றுக்கணக்கில் குடங்கள் வரிசையாக அணி வகுத்துக் காத்துக் கிடக்கின்றன.

பஞ்சம் பல்லிளிக்கிறது
வரிசையாக பிளாஸ்டிக்குடங்கள் தண்ணீர் பிடிப்பதற்காக வைத்துள்ளனர். அந்த ஊரில் உள்ள கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் குடங்கள் எல்லாம் இங்கதான் இருக்கிறது. பச்சை, ரெட், மஞ்சள் என எல்லா கலர்களிலும் தண்ணீர் பஞ்சம் பல்லிளிக்கிறது.

தண்ணீர் பஞ்சம்
புயல் வராது, ஆனா மழை வரும்னு எச்சரித்தார்கள். அதிக அளவு மழை இருக்காது, அதை சேமிச்சு வைங்க, தண்ணீர் பஞ்சம் வருனு சொன்னாங்க. மாவட்ட நிர்வாகங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்ததோ தெரியவில்லை, சொல்ல முடியாத அளவுக்கு மக்கள் தண்ணீருக்காக தவித்து வருகிறார்கள்.
கண்றாவி அவலம்
இந்த காலி குடங்கள் மட்டும் இத்தனை கிலோ மீட்டருக்கு வைத்திருக்கிறார்கள், இவர்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்க வழி இருக்கிறதா? அவர்களின் குடிநீர் தேவைதான் நிறைவேறுமா? இன்னும் எத்தனை காலத்துக்குதான் இந்த கண்றாவி அவலம் என்று தெரியவில்லை!

90 சதவீதம்
இது இந்த ஊரில் மட்டுமல்ல.. கிட்டத்தட்ட தமிழகம் முழுதும் இதே நிலைதான். சென்னையில் 90 சதவீத பகுதிகளில் குடிநீர் இல்லை. மக்கள் அல்லோகல்லப்படுகிறார்கள். எல்லா ஊர்களிலும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

துரித கதி
அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளோ, தேர்தல் முடிந்த பிறகு நமக்கு என்ன லாபம் கிடைக்கும், எங்கு போய் ஒட்டிக் கொண்டு எந்த லாபத்தை அடையலாம் என்று கணக்குப் போட்டு துரித கதியில் சொந்த சுய லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஓடிக் கொண்டுள்ளன.
மக்கள் கவலையை தீர்க்க வானமே அழுதால்தான் உண்டு.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications