'உங்க பான் கார்டை புதுப்பிக்க'.. இந்த மெசேஜ்களை மட்டும் திறக்காதீங்க.. எச்சரிக்கை தகவல்
சென்னை: உங்களுடைய பான் கார்டை புதுப்பிக்க வேண்டுமா என்று வரும் எந்தவொரு தகவல்களையும் திறக்க வேண்டாம் என்றும், அது மோசடி அழைப்புகளாக இருக்கலாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பார்ட் டைம் ஜாப், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம், இரட்டிப்பு லாபம், டிரேடிங் தொடர்பான தகவல்கள், வங்கியில் இருந்து அனுப்புவது போன்ற மெசேஜ் அனுப்புவது, பான் கார்ட், வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் கார்டு போன்றவை தொடர்பாக பல்வேறு மோசடி தகவல்கள் அனுப்பப்படுகின்றன.

வங்கியில் இருந்து அனுப்பப்படுகிறதோ என்று நினைக்கும் சிலர் அந்த தகவல்களை திறப்பதால் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் அத்தனை பணத்தையும் இழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், வங்கியில் இருந்து எந்தவொரு தகவல்களும் கேட்கப்படுவதில்லை என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இருப்பினும், நூதன மோசடி சம்பவங்களில் பொதுமக்கள் சிக்கி வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக உங்களுடைய பான் கார்டை புதுப்பிக்க வேண்டுமா என்று கேட்டு தகவல்கள் அனுப்பப்பட்டு மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா போஸ்ட் பேமேன்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து இந்த மோசடிகள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால், பான் அட்டையைப் புதுப்பிக்க வேண்டுமா என்று வரும் தகவல்களை திறக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உங்களுடைய பான் கார்டை புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல்களாக அனுப்பப்படுகிறது. அந்த தகவலில் வரும் லிங்கை கிளிக் செய்வதன் மூலம் அதில் வாடிக்கையாளரின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகிறது. இதுபோன்ற மெசேஜ்கள் வந்தால் அதனை திறக்காமல் இருப்பதே நல்லது.
இந்நிலையில், இதுபோன்ற எந்தவொரு மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல்களும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுவதில்லை என்று வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிஐபி உண்மை அறியும் பக்கத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில், உங்களுடைய பான் கார்டை புதுப்பிக்காவிட்டால் 24 மணி நேரத்தில் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வரும் தகவல்கள் உண்மையானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியின் பெயரில் இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்படுவதால் வாடிக்கையாளர்கள் அந்த லிங்கில் கேட்கப்படும் தகவல்களை சந்தேம் இல்லாமல் கொடுத்துவிடும் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற இணையதளப் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து நீதிமன்ற ஆணை வந்துள்ளதாக வரும் மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம். நீதிமன்றங்கள் அதுபோன்ற ஆணைகளைப் பிறப்பிக்கவில்லை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications