ட்ரெஸ்ஸுக்குள் ரூ. 1 கோடி தங்கப்பசை.. துபாயில் இருந்து கடத்தி வந்த இளம்பெண்.. சென்னையில் கைது!
சென்னை: துபாயில் இருந்து 1.7 கிலோ தங்கப்பசையை ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த இளம்பெண், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இது தொடர்பாக, சுங்க அதிகாரிகள் நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி, கடத்தி வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், துபாய் சார்ஜாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்த இளம்பெண்ணிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ததில், அந்தப் பெண் தனது ஆடைக்குள் தங்கப்பசையை மறைத்து வைத்து இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை அடுத்து அவர் ஆடைக்குள் மறைத்து துபாயில் இருந்து கடத்தி வந்த 1.7 கிலோ தங்கப்பசையை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதன் சர்வதேச மதிப்பு சுமார் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தங்கப்பசையை ஆடைக்குள் மறைத்து கடத்தி வந்த சென்னையை சேர்ந்த இளம்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications