ஜஸ்ட் 10 நிமிஷ வேலைதான்.. மின் இணைப்புடன் ஆதார் நம்பரையும் இணைக்க.. இப்படி பண்ணுங்க மக்களே..!
மின் இணைப்புடன் ஆதார் நம்பர் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் நடக்கிறது
சென்னை: மின் இணைப்புடன், ஆதார் நம்பரை எப்படி இணைப்பது என்பதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.. இந்த முறையை பின்பற்றி 10 நிமிஷத்தில் நம்பரை இணைத்துவிடலாம் என்கிறார்கள்.
தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது.. அதிலும், விவசாயம் மற்ற பிற தொழில்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் அனைத்து பயனர்களும் மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது..

வெப்சைட்கள்
மின்சாரம் முறைகேட்டை தடுப்பதற்காக, மின் இணைப்புடன், ஆதார் நம்பரையும் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. எனவே, மின் இணைப்புடன், ஆதார் நம்பரையும் இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இண்டர் நெட் மையங்களில், ஆதார் நம்பரை இணைப்பதற்கான பணிகள் செய்து தரப்படுகிறது என்பதால், பொதுமக்கள், நெட் சென்டரை தேடிச்சென்று இணைத்து வருகிறார்கள்... அதேபோல, வெப்சைட்கள் மூலமாகவும் நம்பரை இணைத்து விட முடிகிறது.. ஆதார் எண்ணை இணைத்தவுடன், அந்தந்த போன்களுக்கு மெசேஜ் வந்துவிடும்...

ஆன்லைன்
எனினும் பலருக்கு ஆன்லைனில் எப்படி இணைப்பது என தெரியாமல் உள்ளதால், அவர்களுக்கான எளிய வழிமுறைகள் சொல்லப்பட்டு வருகின்றன.. கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி ஆன்லைனில், ஆதார் நம்பரை இணைத்து கொள்ளலாம். ஆன்லைனில் அரசின் (TANGEDCO) இணையதளத்தில் ஆதார் எண் இணைப்பது குறித்து பார்க்கலாம். https://www.tnebltd.gov.in/adharupload/ என்ற அதிகாரப்பூர்வ லிங்க்-ஐ பயன்படுத்தி ஆன்லைனில் ஆதார் எண் இணைக்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை
நம்பரை இப்படி இணைப்பது எளிது என்றாலும், பலபேரால் அந்த பணியை எளிதாக செய்ய முடிவதில்லை.. அதனால், இதனை கருத்தில் கொண்டு தமிழக மின்சார வாரியம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.. பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும்.

ஸ்பெஷல் கேம்ப்
இன்று காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை மின்கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்காக, 2,811 மின்வாரிய பிரிவு மையங்களிலும் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று, இணைத்துக் கொள்ளலாம். அரசு விடுமுறைகளை தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும். இந்த சிறப்பு முகாம் மூலம் ஆதாரை இணைக்க 34 நாட்கள் அவகாசம் கிடைத்துள்ளது மக்களுக்கு நிம்மதியை தந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ்












Click it and Unblock the Notifications