Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Aadhaar கார்டில் மெகா அப்டேட்.. இனி அலைச்சல் வேண்டாம்! உட்கார்ந்த இடத்திலிருந்தே இனி திருத்தலாம் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் மிக முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் மாறிவிட்டது. இந்த நிலையில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற ஆதார் தகவல்களை மாற்றம் செய்வதற்கு சேவை மையங்களை நாடிச் செல்ல வேண்டிய நிலை இதுவரை இருந்தது. இனி அதுபோன்று பொதுமக்கள் அரசு அலுவலகங்களைத் தேடி அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே தங்கள் ஆதார் தகவல்களை மாற்றம் செய்யும் வகையில் புதிய செயலி ஒன்றை UIDAI அறிமுகப்பட்டுள்ளது. இந்த செயலி இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இன்று ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாகிவிட்டது. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் அரசு நலத்திட்டங்கள், வருமான வரித்துறை செயல்முறைகள் வரை ஆதார் அட்டை அவசியமான ஒன்றாகிவிட்டது.

ஆனால் இதில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தகவல்களில் தவறுகள் ஏற்பட்டால், மக்கள் நேரில் ஆதார் மையங்களுக்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நேர விரயம் மற்றும் தேவையற்ற தாமதங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.

UIDAI Aadhaar Aadhaar card

e-Aadhaar செயலி

இந்த சிக்கலை தீர்க்க UIDAI (Unique Identification Authority of India) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அந்த வகையில், ஆதாரை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியாக . "e-Aadhaar App" எனப்படும் இந்த புதிய செயலி அறிமுகமாகியுள்ளது. இந்த செயலி மூலம், ஆதார் தொடர்பான தகவல்களை மக்கள் தாங்களே வீட்டிலிருந்தபடியே திருத்த முடியும். குறிப்பாக பிறந்த தேதி, பெயர், பெயர்களில் எழுத்துப்பிழை, முகவரி, மொபைல் எண் போன்ற முக்கிய விவரங்களை இனி ஆதார் மையத்திற்கு செல்லாமல் மொபைல் மூலமாகவே புதுப்பிக்க முடியும்.

ஆதார் தகவல் திருத்தம்

இந்த e-Aadhaar செயலி Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கும். சாதாரண பயனாளிகளும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இதை வடிவமைக்க UIDAI முயற்சி எடுத்துள்ளது. இதன் மூலம் ஆதார் மையங்களில் கூடுதல் நெரிசல் குறையும், மக்களின் நேரமும் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

UIDAI

இதுதொடர்பாக UIDAI அதிகாரிகள் கூறும் போது, புதிய e-Aadhaar செயலியில் AI (Artificial Intelligence) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முகஅடையாளம் (Face Recognition) மற்றும் கைரேகை (Biometric Verification) வழியாக பயனாளரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும். இதனால் தரவு பாதுகாப்பு மேலும் வலுப்பெறும், போலி ஆதார் மோசடிகளைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

UIDAI பெயர் திருத்தம்

இந்த செயலி இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தற்போது UIDAI-க்கு mAadhaar என்ற செயலி உள்ளது. அதில் ஆதார் தகவல்களைப் பார்க்கவும், டிஜிட்டல் வடிவில் கார்டுகளை சேமிக்கவும் முடியும். ஆனால் அதில் தகவல் திருத்த வசதி இல்லை. புதிய e-Aadhaar செயலி இதை சரிசெய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக இணையதள வழி சேவையுடன் கூடியதாக இருக்கும். என UIDAI வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் இந்தியா

இந்த முயற்சி 'டிஜிட்டல் இந்தியா' (Digital India) திட்டத்தின் முக்கியமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இது பொதுமக்களுக்கு அதிக வசதியையும், ஆதார் அமைப்பில் பாதுகாப்பான மாற்றத்தையும் அளிக்கும். எனவே இனி நாட்கணக்கில் ஆதார் திருத்தத்துக்காக மக்கள் அலைய தேவையில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+