ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா!
சென்னை: ரூ.25 கோடி வரி கட்டியிருக்கும் போது எப்படி சொத்தை மறைக்க முடியும் என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார். வேட்புமனுவில் தன்னுடைய மற்றும் குடும்பத்தினரின் நிறுவனங்கள் குறித்து முழுமையான விவரங்களை கூறிவிட்டதாகவும், திமுக குடும்பமே வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டாலும் தனது வெற்றியை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். அதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அந்த வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. அதில் ஆதவ் அர்ஜுனா தனது மனைவி பெயரிலான 35 நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடாததால், அவரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்த நிலையில், அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதனால் அதிர்ச்சியடைந்த தவெகவினர், பின்னர் ஆசுவாசமாகினர். இதன்பின் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு வருகிறது. விஜய்யின் இரு வேட்புமனுக்களும் ஏற்பட்டுள்ளன.
234 தொகுதிகளில் தவெகவால் வேட்பாளர்கள் போட முடியுமா என்று திமுகவினர் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது வேட்பாளர்கள் போட்டு, அவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு வருகிறது. திமுகவினர் வழக்கமாக சுயேட்சைகள் என்று போட்டு வைப்பார்கள். எனது வேட்புமனுவில் மார்ச் 25ஆம் தேதி 2026 வரை என்ன கணக்கு வழக்கு இருக்கிறதோ, அதனை வெளிப்படையாக கூறி இருக்கிறேன்.
என்னுடைய சொத்துகளை தான் கணக்கு காட்ட வேண்டும். என்னுடைய நிறுவனங்களை பதிவு செய்திருக்கிறேன். 3, 4 நிறுவவங்களின் பங்குகளை பதிவு செய்துவிட்டேன். குடும்பத்தினரின் நிறுவனங்கள் எல்லாவற்றையும் பதிவு செய்துவிட்டேன். பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களை வேட்புமனுவில் கூற வேண்டும். இயக்குநராக இருக்கும் நிறுவனங்களை கணக்கில் காட்ட தேவையில்லை.
இந்த அடிப்படை கூட திமுக வழக்கறிஞருக்கு தெரியவில்லை. நான் மட்டுமே ரூ.25 கோடி வரி செலுத்தி இருக்கிறேன். எப்படி சொத்தை மறைக்க முடியும்.. வேட்புமனுவில் சொத்துகள், நிறுவனங்கள் குறித்து ஏதும் சந்தேகம் எழுந்தால், அதனை நிராகரிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. அதேபோல் தேர்தல் அதிகாரி என்னுடைய வேட்புமனுவை ஏற்றுள்ளனர்.
கடந்த சில தேர்தல்களில் திமுக எதிரியே இல்லாமல் வென்றுவிட்டது. திமுக குடும்பமே இங்கு பிரச்சாரம் மேற்கொண்டாலும் வெற்றியை தடுக்க முடியாது. வில்லிவாக்கம் தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. இந்த தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளது. என்னுடைய வேட்புமனுவை ஏற்ற தேர்தல் அதிகாரிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
-
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
விஜய் வரவே மாட்டாரா? பொம்மையை வைத்து பிரச்சாரம்.. கடுப்பான தவெக வேட்பாளர்கள்.. பரிதாப நிலை -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
லவ்வரை மிஸ் பண்ணுகிறேன்.. காதல் இல்லாத வாழ்க்கை! ஓபனாக திரிஷா போஸ்ட்! இப்படி சொல்லிட்டாங்களே! -
12 நாட்கள் விஜய்க்கு இப்படியொரு சிக்கல்? திமுக காபந்து அரசு தான் காரணமா? ஐவர் குழுவின் ரகசிய பிளான் -
விஜய் ஒன்னும் சும்மா சினிமாவை விட்டு வரல.. 20,000 கோடிக்கு ஆசைப்படுகிறார்! ஏமாற்றுக்காரர்.. ஜேம்ஸ் வசந்தன் ஆதங்கம் -
என் கதை முடிந்து விட்டதா? திரிஷா ஆவேசம்.. அவருடன் திருமணம், நான்கு குழந்தைகள்.. ஓபனாக வெளியிட்ட போஸ்ட் -
தொடர்ந்து சொதப்பும் விஜய்.. அடுத்தடுத்து பரப்புரை ரத்து! காரணங்களை பாருங்க! -
ஆள் இல்லை.. களம் தெரியவில்லை.. விஜயும் கண்டுக்கல.. பிரச்சாரத்தில் சொதப்பும் தவெக.. பின்னணி -
விஜய் பஞ்சாயத்துக்கு இன்ஸ்டாவில் முற்றுப்புள்ளி வைத்த திரிஷா.. இதுதான் பதிலடியா? -
“விசில் ஊதினால் போதும்.. குழந்தைகளுக்கு சளி நின்றுவிடும்”.. தவெக செங்கோட்டையன் விநோத பிரச்சாரம்! -
அடேங்கப்பா.. விஜய் ரெக்கார்டு.. பிரமாண பத்திரத்தை டவுன்லோடு செய்து பார்த்தவர்கள் எண்ணிக்கை இவ்வளவா?











Click it and Unblock the Notifications