ஆவின் பால்.. கடைகளில் இந்த பொருட்களெல்லாம் கிடைக்காதா.. தயாரிப்பை நிறுத்தப்போகிறதா ஆவின்? என்னாச்சு?
சென்னை: ஆவின் நிறுவனத்தில் சில தயாரிப்புகள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.. இது பரபரப்பையும் தந்து வருகிறது.. என்ன நடந்தது?
நாளுக்கு நாள் ஆவினில் புது புது விவகாரங்கள் வெடித்து வருகின்றன. ஏற்கனவே, அமுல் நிறுவனம் தமிழகத்துக்குள் நுழைய முயற்சித்து வருகிறது.. அமுல் என்பது, குஜராத் அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்..
அதாவது, பால் உற்பத்தி விவசாயிகளிடம் இருந்து அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்ய, அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. அந்த வகையில், தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விளம்பர பணிகளையும் ஆரம்பித்துள்ளது.

தட்டுப்பாடு: தமிழகத்துக்குள் திடீரென, அமுல் வந்துவிட்டால், ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு ஏற்படும்... ஏற்கனவே ஆவின் பால் சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக வரும்நிலையில், அமுலின் வருகையானது, கலக்கத்தை தந்து வருகிறது.. ஆனால், அமுல் வந்தாலும் ஆவினுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் உறுதி தந்து வருகிறார்.
இதற்கு நடுவில் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துள்ளது.. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கைகளை விடுக்க துவங்கி உள்ளன..
விளக்கம்: "பால் கொள்முதல் குறைந்திருப்பதும், ஆவின் பால் பதப்படுத்தும் நிலையங்களில் போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததும் தான் ஆவின் பால் வழங்கல் பாதிப்புக்கு காரணம்.. ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது.. அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் சரியான நேரத்தில் வழங்கப்படும்" என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம் தந்தாலும், பற்றாக்குறையும், தட்டுப்பாடும், தொடர்ந்து நீடித்தே வருகிறது.
பால் திருட்டு: மற்றொருபுறம், அம்பத்தூர் ஆவினில் சிறுவர்களை வேலைக்கு வைத்ததாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.. இதுபோதாதென்று, சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து ஒரே பதிவெண் கொண்ட 2 வாகனங்கள் மூலம் தினமும் பல ஆயிரம் லிட்டர் பால் திருடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை கிளப்பியது.

இப்படிப்பட்ட சூழலில்தான், பாலாடை கட்டி உற்பத்தியை நிறுத்த போவதாக ஆவின் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஆவினில் 'சீஸ்' எனப்படும் பாலாடை கட்டி, அடுமனை யோகர்ட், பாசந்தி போன்றவை கடந்த 2022 ஆகஸ்ட் 19ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன... சென்னை அம்பத்தூர் பால் பண்ணையில் இவற்றை தயாரிப்பதற்கு அனுபவம் பெற்ற ஒப்பந்த ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
விளக்கம்: ஆனால், இப்போது, ஒப்பந்த ஊழியர்கள் பணியில் இருந்து விலகி விட்டனர். அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாததால் இந்த பொருட்களின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு உள்ளதாம்.. இந்த பொருட்களின் தயாரிப்பையும் முற்றிலும் நிறுத்த ஆவின் முடிவெடுத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. ஆனால், இதுகுறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், ஆவின் இதுகுறித்து விளக்கம் தருமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் தரப்பில் எழுந்து வருகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications