தமிழகத்தில் உயருகிறது பால் விலை? ஆவின் பால் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்
Recommended Video
சென்னை: ஆவின் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வேலூர் தேர்தல் முடிந்தபின்னர் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடைசியாக 2014ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆவின் பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாடுகள் பராமரிப்புக்கு அதிக செலவு ஆவது மற்றும் தீவனங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் ஆவின் பால் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

தீவினங்கள் விலை
இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க பொதுச் செயலாளர் ஜி.ராஜேந்திரன் கூறும் போது "மாடுகளின் பராமரிப்பு செலவு கடுமையாக அதிகரித்துள்ளது, ரூ.40 ஆயிரத்துக்கு குறைவாக மாடுகளை வாங்கமுடிவதில்லை. வைக்கோல் போன்ற மாட்டு தீவனங்களும் விலை உயர்ந்துள்ளது.

ரூ. 42 ஆக உயர்த்தணும்
ஆனால் அதேநேரம் பால் உற்பத்தி விலையானது கடந்த 5 வருடத்தில் 63 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. எனவே பசு மாட்டின் பாலின் விலையை லிட்டர் ரூ.27ல் இருந்து ரூ.42ஆக உயர்த்த வேண்டும். அதே போல் எருமை பாலின் விலையை லிட்டர் ரூ.29ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்த வேண்டும்" என்றார்.

அமைச்சரும் ஒப்புதல்
இந்நிலையில் அண்மையில் சட்டசபையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்றார். இதன்பின்னர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்தபேட்டி ஒன்றில், பால் விலை உயர்வு மக்களை பாதிக்காத வகையில் இருக்கும் என்று தெரிவித்தார்.

பால் விலை உயரும்
இந்நியில் வேலூர் தேர்தல் முடிந்த பின்னர் பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக ஆவின் பாலின் விற்பனை விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தனியார்களும் பால் விலையை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications