ஜிஎஸ்டி வரி குறைப்பு! பன்னீர், நெய் விலையை குறைத்தது ஆவின்! ஒரு கிலோ Ghee எவ்வளவு?
சென்னை: ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பொருட்களான நெய், பன்னீர் ஆகியவற்றின் விலையை அந்த நிறுவனம் குறைத்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும் பால் விலையை குறைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பால் பொருட்களுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி தற்போது இன்று முதல் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசு என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா உரையில் அறிவித்திருந்தார்.

இத்தனை ஆண்டுகளாக 4 பிரிவுகளாக இருந்த ஜிஎஸ்டி வரியை தற்போது 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகிய இரு விகிதங்களில் மட்டுமே வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதிலும் பதப்படுத்தப்பட்ட பால் வகைகள், தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வெண்ணெய், நெய், சீஸ், ஐஸ்கிரீம் ஆகிய கொழுப்பு மிக்க பால் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அமுல், நந்தினி போன்ற பிற மாநிலங்களின் பொதுத் துறை நிறுவனங்கள், மதர் டைரி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விலையைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. நெய் போன்ற பொருட்களின் விலை லிட்டருக்கு ரூ 25 முதல் 40 குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனமான ஆவின் இதுவரை விலைக் குறைப்பு அறிவிப்பை வெளியிடவில்லை.
இதற்கு அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலியாக ஆவின் நெய், பன்னீர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது முன்பு பன்னீர் அரை கிலோ 300-க்கு விற்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ரூ 275-க்கு விற்பனை செய்யப்படும். அது போல் பன்னீர் 200 கிராம் ரூ 120க்கு விற்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் ரூ 110-க்கு விற்பனை செய்யப்படும்.
அது போல் நெய் 1 லிட்டர் ரூ 700-க்கு விற்கப்பட்டிருந்த நிலையில் ரூ 660-க்கு இனி விற்கப்படும். அது போல் நெய் 50 மில்லி நேற்று வரை 48 ரூபாய்க்கும் இன்று முதல் 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அரை லிட்டர் நெய் ரூ 365 என நேற்று விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ 345 -க்கு விற்பனை ஆகிறது.
அது போல் நெய் 5 லிட்டர் டின் 3600 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ 3250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெய் 15 கிலோ டின் விலை ரூ 11880-ஆக இருந்த நிலையில் தற்போது ரூ 10,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பால் விலை குறைந்ததா என்பது தெரியவில்லை. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பால் விலை குறைக்காததற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications