தனபாலுடன் நான் பழகியிருக்கிறேன்.. ஆனால் அந்த விஷயத்தை நான் வெளியே சொன்னதே இல்லை.. ஆனந்தராஜ்
சென்னை: எனக்கும் ஒரு ஜாதி அடையாளம் இருக்கிறது, அதை நான் சொன்னதே இல்லை என மாமன்னன் படத்தை பார்க்க ஆனந்தராஜ் பேட்டி அளித்துள்ளார்.
மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் முன்னாள் சபாநாயகர் தனபாலை பற்றி எடுக்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவர் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியிருப்பதாவது: மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. நண்பர்கள் தகவல் சொன்னார்கள். 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இருக்கிறேன். நான் ஜெயலலிதாவின் தீவிர விசுவாதி. என்னுடைய உழைப்பை பார்த்து கட்சியில் அமைப்புச் செயலாளர் , அமைச்சர், சபாநாயகர் ஆகிய பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தார்.

என்னுடைய சாயலில் இந்த மாமன்னன் படம் வந்திருந்தால் அது ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வெற்றி என்றார். இந்த படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வருவதால் இந்த படத்தை மக்கள் போய் பார்க்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதையும் தாண்டி வடிவேலுவின் கதாபாத்திரம் ரசிகர்ளை ஈர்த்துள்ளது.
இந்த மாமன்னன் படம் குறித்து அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த ஆனந்தராஜ் கூறுகையில் ஜாதி குறித்து பல இயக்குநர்கள் பலவிதமான கருத்துகளை கூறியுள்ளார்கள். அவை யாரையும் காயப்படுத்தாமல் இருந்திருக்கும். ஆனால் நாம் ஒரு விஷயத்தை கோபத்தின் காரணமாகவோ விரக்தியின் காரணமாகவோ சொல்லும் போது அது வெளிச்சமாக வெளியில் தெரிகிறது.
அதை குறைத்துக் கொண்டு சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. தனிப்பட்ட முறையில் எனக்கு என்று ஒரு ஜாதி அடையாளம் இருக்கிறது. அதை நான் வெளியில் எப்போதும் சொன்னது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் தாய் எத்தனை முக்கியமோ அதை போல் மொழி, இனத்திற்கு முக்கியம் ஆகும்.
தனபால் சபாநாயகராக இருந்த போது நானும் அவருடன் இருந்திருக்கிறேன். அவருக்காக இரண்டு முறை அவரது தொகுதியில் பிரச்சாரங்களை செய்திருக்கிறேன். மாமன்னன் தனபால் கதை என சொல்லப்படுகிறது. ஜாதி இல்லாத, இனம் இல்லாத மொழி இல்லாத ஒரு தொழில் இருக்கிறது என்றால் அது சினிமா மட்டும்தான் என ஆனந்தராஜ் தெரிவித்தார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications