ஜொலி ஜொலிக்கும் பென்சில் "பெருமாள்".. வச்சு செஞ்சது யார்னு பார்த்தீங்களா.. அடேங்கப்பா.. சூப்பரே!
சென்னை: சோஷியல் மீடியா முழுவதும் பென்சில் பெருமாள் ஜொலித்து கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு முக்கிய காரணம் நடிகர் பிரம்மானந்தம்தான்.. அப்படி ஒரு அசத்தல் புத்தாண்டு பரிசை சக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஓவியமாக வழங்கி இருக்கிறார்.
பிரபல தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம்... அங்கு ஒரு ரிலீஸ் ஆகிறதென்றால், அதில் கண்டிப்பாக பிரம்மாவும் இருப்பார்... அந்த அளவுக்கு பிஸியானவர். தமிழிலும் இவர் ரொம்ப ஃபேமஸ்.
கில்லி, மொழி, குசேலன், சத்யம், தோனி, லிங்கா என பல படங்களில் இவர் நடித்துள்ளார்.. ஓரிரு சீன் வந்தாலும்கூட நிறைவான நடிப்பை தந்துவிட்டு செல்லும் மிகச்சிறந்த திறமைசாலி பிரம்மானந்தம்!
ஆனால், இவருக்குள் ஒரு அபூர்வ திறமை ஒளிந்திருப்பதே இந்த லாக்டவுன் சமயத்தில்தான் எல்லாருக்கும் தெரியவந்தது.. ஊரடங்களில் எல்லாரும் வீட்டிற்குள் இருந்தால், பிரம்மா மட்டும் தன்னுடைய நேரத்தை ஓவியம் வரைந்தே அசத்திவிட்டார்.
இவரது ஓவியங்கள் ஒவ்வொன்றும் இணையத்திலும் வைரலானது.. அதற்கு காரணம் அந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருந்ததுதான்.. இன்னொரு ஸ்பெஷலும் உள்ளது.. தன் ஓவியங்கள் அனைத்தையும் வெறும் பென்சிலில்தான் வரைவார்.. அந்த வகையில் கொரோனாவுக்கு எதிராக இந்தியா போராடுவது, தெலுங்கு கவிஞர் ஶ்ரீ ஶ்ரீ, ரவீந்திரநாத் தாகூர் உட்பட பலரின் ஓவியங்களை பென்சிலில் வரைந்தார்.
இவருக்குள் இத்தனை அதிசயங்கள் ஒளிந்திருக்கிறதா என்று ஆந்திராவே அதிசயித்து போய்விட்டது.. இப்போதும் ஒரு ஓவியம் வரைந்துள்ளார்.. அது வெங்கடேச பெருமாளின் ஓவியம்.. அதுவும் பெருமாளை அசத்திவிட்டார்.. இந்த ஓவியத்தை நடிகர் அல்லு அர்ஜுனுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கி இருக்கிறார் பிரம்மானந்தம்.. மொத்தம் 45 நாட்கள் ஆனதாம் இந்த டிராயிங் வரைவதற்கு.
இந்த படத்தை தன்னுடைய ட்வீட்டில் பதிவிட்டுள்ள அல்லு அர்ஜுன், விலைமதிக்க முடியாத இந்த பரிசுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.. இந்த பெருமாள் ஓவியம் ஒரு காலண்டர் போல தெரிகிறது.. ஆனால், வரைந்தது பென்சில் என்றே தெரியவில்லை.. அவ்வளவு தத்ரூபமாகவும், அழகாகவும் ஜொலிக்கிறார் பென்சில் பெருமாள்!